Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் திடீர்னு உருளுதாம் சாயுதாம்.. ஜிடி நாயுடு மேம்பாலத்தில் ஓடிய பள்ளி வேனின் டயரால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாட்டின் நீளமான பாலம் என்ற பெயர்பெற்ற கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பள்ளி வேனில் இருந்து பின்பக்க டயர் கழன்று ஓடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தின் முக்கியப் பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுடன் கோவை மாநகரை இணைப்பது அவிநாசி சாலை தான். அங்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், விமான நிலையம் ஆகியவை உள்ளன. இதனால் அந்தப் பகுதி எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.

school-vans-tire-ran-over-the-gd-naidu-flyover-in-coimbatore

போக்குவரத்து நெரிசலை எளிமைப்படுவதற்காக அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் பகுதி வரை சுமார் 10.10 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவித்தனர். இதற்காக சுமார் ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கின.

நீளமான பாலம்

தமிழ்நாட்டின் நீளமான பாலம் என்ற பெயரை பெற்ற இந்த பாலத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே இந்த பாலத்தை மேலும் 5 கி.மீ தொலைவுக்கு நீலாம்பூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்துவிட்டார். அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைத்தார்.

இந்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் சிரமமின்ற பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பள்ளி வேனில் இருந்து பின்பக்க டயர் கழன்று ஓடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

என்ன டயரை காணோம்

கோவை மாவட்டம், ஜிடி நாயுடு மேம்பாலம் மீது பள்ளி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென அந்த வேனிலிருந்து பின்பக்க சக்கரம் கழன்று பின்பக்கமாக ஓடியுள்ளது. இதனை அறியாத வேன் ஓட்டுநர் பள்ளி வேனை இயக்கியபடி இருந்துள்ளார். அப்போது, திடீரென வேன் சக்கரம் இல்லாத பகுதியில் சரிந்து நிற்பதைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக வேனை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார்.

மேம்பாலத்தில் பரபரப்பு

பிறகு வாகனத்தை சோதனை செய்தபோது டயர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்து. சக்கரம் எங்கு சென்றது என்பது தெரியாமல், நீண்ட நேரமாக ஓட்டுநர் தேடிய நிலையில், சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் கிடந்த சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகு, அந்த சக்கரம் வேன் இருந்த இடத்துக்கு உருட்டிக் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தால் மேம்பாலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+