கத்தரி வெயிலின் முதல்நாளே.. கோவையில் வெளுத்து வாங்கிய மழை.. மக்கள் ஹேப்பி !
Subscribe to Oneindia Tamil
கோவை : கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் திடீரென மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கொளுத்தும் வெயிலை குளிர்விக்க சில இடங்களில் மழை பெய்தது.
தமிழ்நாட்டில் பெரும்பாலும் இன்று வறண்ட வானிலையே நிலவும் என்றாலும் மேற்கு தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ள மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரம், மலுமிச்சம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் சூறைக்காற்று வீச தொடங்கியது. இதையடுத்து மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்துள்ளது.
கத்தரி வெயில் தொடங்கிய முதல் நாளே இத்தகைய மழையால் மக்கள் மகிழ்ந்தனர். வானிலை மையம் அறிவித்தபடி இந்த மழை தொடரும் என எதிர்பார்க்க படுகிறது.












Click it and Unblock the Notifications