ரெட் அலர்ட்.. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கோவை: கோவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை பெய்து வரும் நிலையில், பில்லூர் அணை நிரம்பியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 16 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளான கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, குமரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.

கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கொட்டித் தீர்க்கும் மழையால் அணைகள், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த பெய்து வருகிறது. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர் மட்டம் நேற்று காலை 78 அடியாக இருந்தது.
இந்நிலையில், நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து இன்று 25 ஆம் தேதி காலை 86 அடியாக உயர்ந்தது. தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கி இன்று நள்ளிரவு அணை அதன் முழு கொள்ளளவான 100 அடியை நெருங்கியது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்மட்டத்தை 97.5 அடியாக நிலை நிறுத்தி பராமரிக்கப்பட்டு வருகிறுத. அணைக்கு வரும் நீர் விநாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் அப்படியே உபரி நீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், பவானி ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றின் கரையோரப் பகுதியான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications