தூங்கி கொண்டிருந்த 17 பேரை.. காவு வாங்கிய காம்பவுண்ட் சுவர்.. வீட்டு ஓனர் சிவசுப்பிரமணியம் கைது
காம்பவுண்ட் சுவர் கட்டிய வீட்டு ஓனர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்
Recommended Video
மேட்டுப்பாளையம்: ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்த 17 பேரை, மண்ணோடு மண்ணாக காவு வாங்க காரணமாக இருந்த, 20 அடி உயர காம்பவுண்ட் சுவர் கட்டிய வீட்டு ஓனர் சிவசுப்பிரமணியத்தை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களை போலவே மேட்டுப்பாளையத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிகாலை வரை 18 செமீ அளவுக்கு நல்ல மழை பெய்தது.
இதனால், பல வீடுகள் மேட்டுப்பாளையம் பகுதியில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஏடி காலனி கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் ஒரு குடியிருப்பு பகுதியும் பாதிக்கப்பட்டது. இதில், இங்குள்ள சுமார் 80 அடி நீளம், 20 அடி உயரத்தில் கருங்கல் சுற்றுச்சுவரானது, விடிகாலை 4.15 மணிக்கு இடிந்து , பக்கத்தில் இருந்த 4 வீடுகளின் மீது விழுந்தது.

கருங்கல் சுவர்
அந்த வீடுகள் எல்லாமே ஓட்டு வீடுகள்தான்.. கருங்கல் சுவர் விழுந்ததுமே அந்த வீடுகள் நொறுங்கி விழுந்தன. அதனால் உள்ளே தூங்கி கொண்டிருந்தவர்கள் உடல் நசுங்கினர்.. அப்படியே வீடுகளுக்குள்ளேயே புதைந்தும் உயிரிழந்தனர். 4 வீடுகளுமே மண்ணோடு மண்ணாக புதைந்துவிட்டது.

17 பேர்
விடிகாலை நேரத்தில், கனத்த மழை பெய்யும்போது இப்படி ஒரு சம்பவம் நடந்தது அங்கிருந்தவர்களுக்குகூட தெரியவில்லை. விடிந்தபிறகுதான் அக்கம்பக்கத்தினர் கண்டு அதிர்ந்துபோயினர்.. மீட்பு பணிகள் ஆரம்பமானது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள். சிறுவர், சிறுமியர், 10 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர். இதில், ஆனந்த்குமார், நதியா, அக்ஷயா, லோகுராம் ஆகிய 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

காம்பவுண்ட் சுவர்
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது.. தகவலறிந்து கலெக்டர் அங்கு வந்ததுமே பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டு, காம்பவுண்ட் சுவர் அமைந்துள்ள வீட்டின் ஓனர் சிவசுப்பிரமணியத்தை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது சம்பந்தமாக பொதுமக்கள் போராட்டமும் நடத்தினர்.

கைது
இது சம்பந்தமாக சீமான், முக ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வேண்டுகோள் வைத்து வரும்நிலையில், சம்பந்தப்பட்ட வீட்டின் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசார் சிவசுப்பிரமணியத்தை கைது செய்ததுடன், விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications