"மறுப்பு".. 12 மணி வரை நல்லாதான் போச்சு.. ராஜேந்திரன் எடுத்த திடீர் முடிவு.. ஷாக்கான திவ்யா!
தாம்பத்தியம் பிரச்சனை காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
கோவை: ராத்திரி 12 மணி வரை மனைவியுடன் நல்லாதான் பேசிக் கொண்டிருந்தார் ராஜேந்திரன்.. அதற்கு பிறகுதான் அந்த பயங்கரம் நடந்துள்ளது.. அதிரடி திருப்பமாக ஒரு கடிதமும் கிடைத்துள்ளது..!
கோவை சுண்டக்கமுதூர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.. இவருக்கு 27 வயதாகிறது.. அப்பநாயகன்புதூர் பகுதியில் மெடிக்கல் ஷாப் ஒன்றினை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி பெயர் திவ்யாகார்த்திகா.. 25 வயதாகிறது.. கல்யாணம் ஆகி 5 மாதம்தான் ஆகிறது.. கணவன் - மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவில் மனக்கசப்பு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் திவ்யா மன உளைச்சலிலும் இருந்துள்ளார்

விபரீதம்
நேத்து ராத்திரி 12 மணி வரை 2 பேரும் நல்லாதான் பேசிக் கொண்டிருந்தார்.. அதற்கு பிறகுதான் மறுபடியும் தாம்பம்யம் குறித்த தகராறு வெடித்துள்ளது.. இதனால் ஆத்திரம் கோபம் அடைந்த ராஜேந்திரன், பெட்ரூமில் படுத்துக் கொண்டார். திவ்யா ஹாலில் படுத்துக் கொண்டார். திவ்யாவும் அப்படியே அழுது அழுது தூங்கிவிட்டார்.

தற்கொலை
ஆனால், 1 மணிக்கு மேல், பெட்ரூமில் உள்ள ஃபேனில் நைலான் கயிறு போட்டு அதில் தொங்கிவிட்டார் ராஜேந்திரன். இது தெரியாமல் ஹாலில் விடிய விடிய தூங்கி கொண்டிருந்தார் திவ்யா.. காலை 7 மணிக்குதான் ராஜேந்திரன் தூங்கி எழுவாராம்.. அதனால் காலை 7 மணிவரை வெளியவே உட்கார்ந்திருந்த திவ்யா, அதற்கு பிறகுதான் ரூமுக்குள் சென்றுள்ளார்.

அலறல்
அப்போதுதான் ராஜேந்திரன் தூக்கு மாட்டி கொண்டு இறந்திருப்பதை கண்டு அலறினார்.. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.. ஃபேனில் ஒரு ஊக்கு மாட்டி, அதில் கயிறு கட்டி தொங்கி உள்ளார் ராஜேந்திரன்.. உறவினர்களே சடலத்தை இறக்கிவிட்டு பேரூர் போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளனர்.. போலீசாரும் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தம்பதி
விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதான், தாம்பத்தியத்திற்கு திவ்யா சம்மதிக்கவே இல்லையாம்.. இது தொடர்பாகவே தம்பதிக்குள் தொடர்ந்து பிரச்சனை இருந்தபடியே வந்துள்ளது தெரியவந்துள்ளது.. அதுமட்டுமல்ல, தற்கொலைக்கு முன்பு, ஒரு லெட்டரையும் எழுதி வைத்துள்ளார். அந்த லெட்டரும் அதே ரூமில் இருந்துள்ளது.. இதே தாம்பத்ய காரணத்தைதான், கடிதத்திலும் உருக்கமாக தெரிவித்திருக்கிறார் ராஜேந்திரன். கல்யாணம் ஆகி 5 மாதத்தில் இப்படி ஒரு தற்கொலை நடந்ததால், இருதரப்பு உறவினர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்..!












Click it and Unblock the Notifications