கோவையில் தோல்விதான்.. ஆனால் இதை கவனிச்சீங்களா! திமுகவுக்கு இணையாக தபால் வாக்குகளை பெற்ற அண்ணாமலை!
கோயம்புத்தூர்: கோவை லோக்சபா தொகுதியில் பாஜகவின் அண்ணாமலை தோல்வியடைந்துள்ள நிலையில், அஞ்சல் வாக்குகளில் திமுக வேட்பாளருக்கு இணையான வாக்குகளை அவர் பெற்றிருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மிகுந்த கவனம் பெற்றிருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வந்திருந்தது. வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில்தான் பாஜக மீதான விமர்சனங்கள் அதிகமாகவும், கூர்மையாகவும் இருந்தன. இப்படி இருக்கையில் இந்த தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதே நேரம் தமிழகத்தின் லோக்சபா தேர்தல் முடிவுகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன. குறிப்பாக தமிழகத்தின் கோவை தொகுதி மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த தொகுதியில் பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். இவருக்கு எதிராக திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில், சிங்கை ஜி.ராமச்சந்திரனும் களமிறக்கப்பட்டார்.
தேர்தல் முடிவில் திமுகவின் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று அண்ணாமலையை விட 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாவது இடமும், சிங்கை ஜி.ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த வெற்றியை திமுக வெகுவாக கொண்டாடி வருகிறது.
இதற்கு காரணம் அண்ணாமலையின் துடுக்கான பேச்சுதான். "நிச்சயமாக 2024 தேர்தலுக்குப் பிறகு கோபாலபுரத்தில் ஊழல் குடும்பத்தினர் சிறையில் இருப்பார்கள் என்பதற்கு மோடி கேரண்டி கொடுப்பார். தமிழகத்தின் 8 கோடி மக்களும் திமுக என்ற தீய சக்தியிடம் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதற்கும் மோடி கேரண்டி கொடுப்பார். தேர்தலுக்கு பின் முற்றிலுமாக அது அகற்றப்படும். திமுகவில் வாரிசுகளுக்கு தான் வாய்ப்பளிக்கப்படுகிறது. அவர்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் ஜூன் 4-ல் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெல்லும்" என்றெல்லாம் பேசியிருந்தார்.
ஆனால் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்தது. இந்நிலையில், கோவை தொகுதியில் திமுகவுக்கு நிகராக தபால் ஓட்டுகளை அண்ணாமலை பெற்றிருக்கிறார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, கோவையில் மொத்தம் 7,132 அஞ்சல் வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இதில் கணபதி ராஜ்குமார் 2,772 வாக்குகளையும், அண்ணாமலை 2,524 வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். இது ஏறத்தாழ திமுகவுக்கு நிகரான வாக்குகள்தான். இதை சோஷியல் மீடியாக்களில் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அதேபோல அதிமுகவின் ராமச்சந்திரன் 887, நாதக வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 270 அஞ்சல்வாக்குகளைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications