கோவை.. சர்ச், கோவில்களில் குண்டு வைக்க சதி.. 3 பேர் கைது.. 5 நாள் போலீஸ் காவலுக்கு கோர்ட் உத்தரவு
ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேரை விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது
கோவை: கோயம்புத்தூரில் உள்ள சர்ச், கோயில்களில் குண்டு வைக்க திட்டம் போட்ட 3 இளைஞர்களையும், 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை முதன்மை மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது .
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சமயத்தில், அந்த தீவிரவாதிகளோடு இணைய தளம் மூலம் தொடர்பில் இருந்தவர்கள் யார் என ஆராயப்பட்டது.

அப்போது, கோவையை சேர்ந்த 7 பேர் வீடுகளில் கடந்த 12-ம் தேதி என்.ஐஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான செல்போன்கள், சிம்கார்டுகள், லேப்- டாப், உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கோவை உக்கடத்தைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான் மற்றும் கரும்புக்கடையைச் சேர்ந்த ஷேக் சஃபியுல்லாஹ் ஆகியோர் அந்த தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததால் அவர்கள் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டு, மாவட்ட நீதிபதி சக்திவேல் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் 28-ம் தேதி வரை அதாவது நாளை வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த 3 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகள் மற்றும் தீவிரவாதச் செயல்களை உள்நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூக வலைதளங்கள் மூலமாகப் பரப்பியதாகவும், தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றச் சதித் திட்டம் தீட்டி இருப்பதாகவும் கோவையில் உள்ள சர்ச் மற்றும் கோயில்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போத்தனூர் போலீசார் தங்களது எப்ஐஆரில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றத்தில் போத்தனூர் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications