கோவை.. சர்ச், கோவில்களில் குண்டு வைக்க சதி.. 3 பேர் கைது.. 5 நாள் போலீஸ் காவலுக்கு கோர்ட் உத்தரவு
ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேரை விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது
கோவை: கோயம்புத்தூரில் உள்ள சர்ச், கோயில்களில் குண்டு வைக்க திட்டம் போட்ட 3 இளைஞர்களையும், 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை முதன்மை மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது .
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சமயத்தில், அந்த தீவிரவாதிகளோடு இணைய தளம் மூலம் தொடர்பில் இருந்தவர்கள் யார் என ஆராயப்பட்டது.

அப்போது, கோவையை சேர்ந்த 7 பேர் வீடுகளில் கடந்த 12-ம் தேதி என்.ஐஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான செல்போன்கள், சிம்கார்டுகள், லேப்- டாப், உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கோவை உக்கடத்தைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான் மற்றும் கரும்புக்கடையைச் சேர்ந்த ஷேக் சஃபியுல்லாஹ் ஆகியோர் அந்த தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததால் அவர்கள் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டு, மாவட்ட நீதிபதி சக்திவேல் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் 28-ம் தேதி வரை அதாவது நாளை வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த 3 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகள் மற்றும் தீவிரவாதச் செயல்களை உள்நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூக வலைதளங்கள் மூலமாகப் பரப்பியதாகவும், தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றச் சதித் திட்டம் தீட்டி இருப்பதாகவும் கோவையில் உள்ள சர்ச் மற்றும் கோயில்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போத்தனூர் போலீசார் தங்களது எப்ஐஆரில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றத்தில் போத்தனூர் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications