பாலஸ்தீன போராளிகளுக்கு இன்குலாப்.. கோவையை அதிரவைத்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் முழக்கம்!
கோவை: இஸ்ரேல்- ஹமாஸ் இயக்க யுத்தத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோவையில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் ஜிஹாதிகள் அக்டோபர் 7-ந் தேதி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இஸ்ரே-ஹமாஸ் இடையேயான யுத்தம் உக்கிரமாக நடைபெற்று வருகிறது.

இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம்: கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தத்தில் இருதரப்பிலும் சுமார் 8,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் மட்டும் குழந்தைகள் ,பெண்கள் உட்பட 5,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். பாலஸ்தீன மக்கள் அகதிகளாக தஞ்சமடைந்த மருத்துவமனை உள்ளிட்டவையும் இஸ்ரேலால் தாக்கப்பட்டன. இந்த யுத்தத்தில் சிக்கிய அப்பாவி பாலஸ்தீன மக்களுக்கு சர்வதேசம் உதவிக் கரம் நீட்டி வருகிறது. ஹமாஸ் ஜிஹாதிகளுடம் தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை அடுத்தடுத்து விடுவித்தும் வருகின்றனர்.

அமைதி முயற்சிகள்: அதேநேரத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவும் சர்வதேச அளவில் அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. உலகின் பல நாடுகளில் இஸ்ரேல், பாலஸ்தீன ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தியாவிலும் இதேபோல போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கோவையை அதிர வைத்த முழக்கம்: கோவையில் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் இன்று பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டம் நடத்தப்பட்டது. கோவை உக்கடம் பகுதியில் இன்று இப்போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் இன்று ஒன்று திரண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில், இன்குலாப்! இன்குலாப்- பாலஸ்தீனம் இன்குலாப்; இன்குலாப் இன்குலாப் பாலஸ்தீன போராளிகளுக்கு இன்குலாப் என்பது உள்ளிட்ட முழக்கங்கள் ஒருசேர எதிரொலித்தன. இந்தப் போராட்டத்தில் பேசிய முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள், இஸ்ரேலால் காஸா பகுதியில் எங்கள் இனம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகிறது என வேதனை தெரிவித்தனர். ஏற்கனவே கோவையில் மக்கள் ஒற்றுமை மேடை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications