மதநல்லிணக்கத்தை வலியுறுத்த.. கோவை உக்கடத்தில் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்ற ஜமாத் நிர்வாகிகள்
கோவை: கோவை உக்கடம் அருகே கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதியை பார்வையிட்ட ஜமாத் நிர்வாகிகள் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்குள் சென்றனர். அவர்களை கோயில் நிர்வாகிகளும் பூசாரியும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரை ஓட்டிச் சென்ற ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் உக்கடம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் அன்றைய தினமே இறந்தவர் யார் என்பது குறித்த விவரங்களையும் கண்டறிந்தனர். மேலும் முபினின் வீட்டில் சோதனையிட்டனர்.

100 கிலோ வெடிப்பொருட்கள்
அந்த சோதனையின் போது 100 கிலோ வெடிப்பொருட்கள் இருந்ததாகவும் அதை கைப்பற்றியதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். முபினின் வீட்டருகே இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீஸார், அவரது வீட்டிலிருந்து யாரோ சிலர் அதிக எடை கொண்ட பொருளை தூக்கிச் சென்று காரில் வைத்த காட்சிகள் பதிவாகியிருந்தன.

வெடிபொருளாக இருக்கலாம்
எனவே அவை வெடி பொருளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் உக்கடம் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது முபின் வந்த வாகனத்தை நிறுத்தியதால் அவர் சிலிண்டரை வெடிக்க வைத்திருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளனர்.

கோவை கார் வெடிப்பு
இந்த நிலையில் கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சென்றிருந்தனர். கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்ற அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவையில் மத நல்லிணக்கத்துடன் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், எந்த பதற்றமும் இல்லை என்றார்.

ஜமாத் அமைப்பினர்
இந்த நிலையில் இன்றைய தினம் கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ஜமாத் அமைப்பினர் பார்வையிட்டனர். மேலும் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கும் ஜமாத் நிர்வாகிகள் சென்றனர். அவர்களை கோயில் நிர்வாகிகளும் பூசாரியும் வரவேற்று அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான பேச்சுவார்த்தையை நிகழ்த்தினர்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications