மதநல்லிணக்கத்தை வலியுறுத்த.. கோவை உக்கடத்தில் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்ற ஜமாத் நிர்வாகிகள்
கோவை: கோவை உக்கடம் அருகே கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதியை பார்வையிட்ட ஜமாத் நிர்வாகிகள் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்குள் சென்றனர். அவர்களை கோயில் நிர்வாகிகளும் பூசாரியும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரை ஓட்டிச் சென்ற ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் உக்கடம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் அன்றைய தினமே இறந்தவர் யார் என்பது குறித்த விவரங்களையும் கண்டறிந்தனர். மேலும் முபினின் வீட்டில் சோதனையிட்டனர்.

100 கிலோ வெடிப்பொருட்கள்
அந்த சோதனையின் போது 100 கிலோ வெடிப்பொருட்கள் இருந்ததாகவும் அதை கைப்பற்றியதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். முபினின் வீட்டருகே இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீஸார், அவரது வீட்டிலிருந்து யாரோ சிலர் அதிக எடை கொண்ட பொருளை தூக்கிச் சென்று காரில் வைத்த காட்சிகள் பதிவாகியிருந்தன.

வெடிபொருளாக இருக்கலாம்
எனவே அவை வெடி பொருளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் உக்கடம் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது முபின் வந்த வாகனத்தை நிறுத்தியதால் அவர் சிலிண்டரை வெடிக்க வைத்திருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளனர்.

கோவை கார் வெடிப்பு
இந்த நிலையில் கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சென்றிருந்தனர். கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்ற அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவையில் மத நல்லிணக்கத்துடன் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், எந்த பதற்றமும் இல்லை என்றார்.

ஜமாத் அமைப்பினர்
இந்த நிலையில் இன்றைய தினம் கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ஜமாத் அமைப்பினர் பார்வையிட்டனர். மேலும் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கும் ஜமாத் நிர்வாகிகள் சென்றனர். அவர்களை கோயில் நிர்வாகிகளும் பூசாரியும் வரவேற்று அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான பேச்சுவார்த்தையை நிகழ்த்தினர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications