சசிகலா தலைமையை ஏற்பேன்... தினகரனுக்கு அந்த தகுதியில்லை- திடீர் பல்டி அடிக்கும் கேசி பழனிச்சாமி
கோவை: சசிகலா தலைமையை ஏற்பேன். ஆனால் தினகரனுக்கு அந்த தகுதியில்லை என ஈபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.சி. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், பதவி பறி போன 18 எம்.எல்.ஏக்களை இன்னமும் அதிமுகவில் இருந்து நீக்க வில்லை. அவர்களை கட்சிக்கு வாருங்கள் என இபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பு அழைப்பது என்பது காமெடி அறிவிப்பாக உள்ளது.
[என்னாது! 20 தொகுதி இடைத்தேர்தல்களில் இரட்டை இலையில் அதிமுக போட்டியிடக் கூடாதா? இதென்ன சோதனை ]

காமெடி அறிவிப்பு
கட்சியில் இருந்து 3000 பேரை நீக்கியது ஓபிஎஸ்- இபிஎஸ்தான். இது அவர்கள் இருவரின் நடிப்பு எனவும் தெரிவித்தார். நீக்கத்தை ரத்து செய்யாமல், வெளியில் சென்றவர்கள் கட்சிக்கு வாருங்கள் என இபிஎஸ்- ஓபிஎஸ் சொல்வது காமெடியானது.

ஏற்க தயார்
நான் இப்போதும் அதிமுககாரன்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் மட்டுமே எனக்கு தலைவர். சசிகலா,இபிஎஸ் , ஓபிஎஸ் என யார் வேண்டுமானாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களை தலைவராக ஏற்க தயார்.

பதவிக்கு போட்டியிட முடியும்
தினகரனுக்கு பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதியில்லை. பைலாவை மாற்றிய செயல்பாடு கட்சியை பலவீனப்படுத்தும். பல ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும்.

பலமான கட்சி
தேசிய கட்சியோ, நடிகரோ இந்த கட்சியை தவறாக வழிநடத்த வாய்ப்பு இருக்கின்றது.
அதிமுக பலமான கட்சி எனவும், அதை சீரழிக்கின்ற முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி,
ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். ஏதோ ஒரு அழுத்தத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுகின்றது. அதன் நடவடிக்கையில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் இருக்கின்றன என்றார் கே.சி.பழனிச்சாமி.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications