4 ஆக பிரிந்த அதிமுக கம்பெனி 6 மாசத்தில் மூடப்படும்.. கோவை செல்வராஜ் ஆரூடம்
கோவை: அதிமுக எனும் கம்பெனி 6 மாதத்தில் மூடப்படும் என கோவை செல்வராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசுகையில் அதிமுக கம்பெனி 6 மாதத்தில் மூடப்படும். அதிமுக எனும் கம்பெனி 4 ஆக பிரிந்துள்ளது. யார் கூறியும் நான் திமுகவில் இணையவில்லை.
நானாகவே திமுகவில் இணைந்தேன் என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். கோவை செல்வராஜ் அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓபிஎஸ் பக்கம் இருந்தார். அவருக்கு கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி வி சண்முகம் உள்ளிட்டோருக்கு தக்க பதிலடிகளை கொடுத்து பேசி வந்தார் கோவை செல்வராஜ். இந்த நிலையில் திடீரென அதிமுகவிலிருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது: நான் கடந்த சில மாதங்களாகவே கட்சி பணிகளில் ஈடுபடாமல் விலகியே இருந்தேன்.

ஓபிஎஸ் பதவி
அப்போது ஓபிஎஸ் என்னிடம் வந்து நீங்கள் வகிக்கும் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை வேறு யாருக்காவது கொடுத்துவிடவா என கேட்டார். அதற்கு நான் தாராளமாக கொடுத்து விடுங்கள். இனி உங்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்றேன். ஓபிஎஸ்ஸும் வைத்திலிங்கமும் அதிமுகவை அழித்து வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவி கொடுத்து வருகிறார்கள். இதனால் நிறைய பேருக்கு அவர்கள் மீது அதிருப்தி உள்ளது. விரைவில் நிறைய பேர் அதிமுகவிலிருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைவார்கள்.

ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும்
ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சுயநலத்திற்காக அதிமுகவை பிளவுப்படுத்துகிறார்கள். அவர்களுடன் பயணிக்க நான் விரும்பவில்லை. எனவே கட்சியிலிருந்து நானாகவே விலகுகிறேன். என்னை யாரும் நீக்கவில்லை என தெரிவித்திருந்தார். இதையடுத்து கோவை செல்வராஜை சமாதானப்படுத்த பெங்களூர் புகழேந்தி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜியுடன் வந்த கோவை செல்வராஜ்
ஆனால் கடந்த 7ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் அண்ணா அறிவாலயத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் கோவை செல்வராஜ் சென்றிருந்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் தமிழக மக்களையும் தமிழகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை முதல்வர் ஸ்டாலினை தவிர வேறு யாருக்கும் இல்லை. ஆறுமுகசமி ஆணையத்தின் அறிக்கையால் நான் அதிமுகவில் தொடரவில்லை என்றும் கோவை செல்வராஜ் தெரிவித்திருந்தார்.
-
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சிக்கல்.. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் சம்மன் -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
காது கூசுது.. இவ்ளோ கேவலமாக பேசுவதா? நயன்தாரா குறித்த சிவி சண்முகம் பேச்சு! நடிகர் சங்கம் டென்ஷன் -
விசிகவுக்கு 7 தொகுதிகள்.. தேமுதிகவுக்கு எவ்வளவு? நாளை தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக! -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு











Click it and Unblock the Notifications