Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னைக்கே இந்த நிலையா.. போதையில் காரை ஓட்டி.. தலைகீழாக நடுரோட்டில் கவிழ்த்த இளைஞர்கள்.. கோவை அருகே

தொண்டாமுத்தூர் அருகே கார் விபத்தில் இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கடையை திறந்த முதல்நாளே விபத்து ஏற்பட்டுவிட்டது.. போதையில் காரை ஓட்டி நிலையில் நடுரோட்டில் அந்த கார் தலைகீழாக கவிழ்ந்து விட்டது!! கோவை அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

Recommended Video

    குடிபோதையில் கார் ஓட்டிய இளைஞர்கள்...தலைகீழாக கவிழ்ந்து விபத்து

    பலவித எதிர்ப்புகள் வந்தாலும் அரசு உறுதியாக இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடைகளை இன்று திறந்தது... சமூக விலகலை கடைப்பிடித்து சில இடங்களில் சரக்கு வாங்கினாலும், பல இடங்களில் சமூக விலகல் பின்பற்றப்படவே இல்லை.

     lockdown: car accident in thondamuthur near kovai

    மேலும் பயந்தபடியே வன்முறைகளும், விபத்துக்களும் நடக்க ஆரம்பித்துள்ளன.. மதுரை அலங்கநல்லூரில் கணவன் குடித்துவிட்டு வந்தார் என்பதற்காக அதிர்ச்சி அடைந்த மனைவியும், மகளும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துவிட்டனர்.. இப்போது ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் உள்ளனர்.

    அதேபோல கோவை அருகே ஒரு விபத்து நடந்துள்ளது.. தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் வடவள்ளியை சேர்ந்தவர் ரஞ்சித்.. இவர் தன்னுடைய நண்பர்கள் ஹரிஹரன், ஆண்டனி, நித்தின் ஆகியோருடன் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது.. பிறகு திரும்பவும் வீட்டிற்கு செல்லும்போது அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு காரில் சென்றுள்ளனர். ரஞ்சித் தான் காரை ஓட்டினார்.

    காரிலேயே தண்ணி அடித்தார்களா அல்லது மது கிடைத்த உற்சாகமா என்று தெரியவில்லை.. காரை வேகமாக ஓட்டி உள்ளார் ரஞ்சித்.. புதுப்பாளையம் அருகே வரும் அந்த கார் டயர் மடார் என வெடித்தது.. ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகீழாக நடுரோட்டிலேயே கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.. நல்லவேளை.. காரில் இருந்த இளைஞர்களுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.. அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் போலீசார் விரைந்து வந்தனர்.. விபத்து குறித்து விசாரித்தும் வருகின்றனர். இதில், ரஞ்சித் தவிர மற்ற 3 பேரும் குடிபோதையில் இருந்தது தெரிந்தது.. காரில் நிறைய மதுபானங்கள் இருந்ததும் பறிமுதல் செய்யப்பட்டது. எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

    பல நாட்களுக்கு பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே துர்சம்பவங்கள் நடந்து வருவது மக்களை கவலைக்குரியதாக்கி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+