மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் பலிக்காது.. ஏனெனில் இது திராவிட மண்; பெரியார் மண்.. ஸ்டாலின் அதிரடி!
கோவை: தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு கோடி வரை ஊழல் நடந்துள்ளது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் பலிக்காது. இது திராவிட மண் என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும், இந்திய வார்ப்பட நிறுவனம் கோவையில் துவங்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

எங்கும் ஊழல்
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க .ஸ்டாலின்தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கிணத்துக்கடவு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய மு.க. ஸ்டாலின் கூறியதாவது:- அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி உள்ளாட்சி நிர்வாகத்தில் பல்வேறு ஊழல்கள் செய்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு கோடி வரை ஊழல் நடந்துள்ளது.

பாஜகவுக்கு பயந்து வாக்களித்தனர்
சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகிய சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மன், அமைச்சர் வேலுமணி 2 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளார் என்று கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக போராடிய போது, அதற்கு ஆதரவாக மாநிலங்களவையில் பாஜகவிற்கு பயந்து பன்னீர்செல்வத்தின் மகன் வாக்களித்த நிலையில், இப்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்கி விடுவோம் என பொய்யான வாக்குறுதி அளித்து உள்ளனர்.

மோடி வேலை தமிழகத்தில் பலிக்காது
மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் பலிக்காது. ஏனெனில் இது திராவிட மண் பெரியார் மண். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் திமுக ஆட்சிக்கு வந்ததும் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள். திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை பிரதி எடுத்து அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீட்டு உள்ளனர். கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் நுழைவுத் தேர்வை தமிழகத்தில் வர அனுமதிக்கவில்லை. தற்போது தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா ஜனாதிபதியிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

கோவை வளர்ச்சி மேம்படுத்தப்படும்
கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும், இந்திய வார்ப்பட நிறுவனம் கோவையில் துவங்கப்படும், நவீன புதிய புறநகரை உருவாக்கி, கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும், போக்குவரத்தை குறைக்கும் விதமாக பறக்கும் ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். மேலும், பெண்கள் முன்னேற்றத்திற்காக அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீதமாக உள்ள இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுளள்து.

மாதம் ஒரு முறை மின் கட்டணம்
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என தான் வலியுறுத்திய நிலையில், அதிமுக அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மீதமுள்ள 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும், கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும், சூலூரில் மகளிர் கலை அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications