Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்ப்புதல்வன் வந்தாச்சு.. மாணவர்களுக்கு 1000 ரூபாயும் வந்தாச்சு.. சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த "தமிழ்ப்புதல்வன்" திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் துவங்கி வைத்துள்ளார்.. இதையடுத்து, உயர்கர்லவி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் ரூ.1000 உதவித்தொகையையும் வழங்கினார் முதல்வர்.

தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது. காலை உணவுத்திட்டம், உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்துமே மாணவர்களின் வளர்ச்சிக்கு மிகுந்த உதவியாக இருந்து வருகிறது.

rs stalin 1000

அதிலும், கல்லூரிகளில் சேரும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் 3 லட்சம் மகளிருக்கு மேல் பயன்பெற்று வருகிறார்கள்.. கடந்த நிதியாண்டில் மட்டும் 2,09,365 மாணவியர்களும், 2023-2024-ஆம் நிதியாண்டில் சுமார் 64,231 மாணவிகள் கூடுதலாக இணைந்து 2,73,596 மாணவியர்களும் பயனடைந்துள்ளனர்.

எண்ணிக்கை அதிகரிப்பு: இந்த வரிசையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டம்தான், "தமிழ்ப்புதல்வன்" திட்டமாகும்.. பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட, அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

அதாவது, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது..

ஆதார் அட்டை: இதற்கு, ஆதார் அட்டை, ஆதார் அட்டை இணைக்கப்பட்ட ஜாயிண்ட் வங்கி கணக்கு, அரசு பள்ளியில் படிப்பதற்கான ஆவணங்கள் இருந்தாலே போதும்.. அதேபோல, தமிழகத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்பவராகவும், பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசு அங்கீகரித்ததாகவும் இருத்தல் வேண்டும்.. பிற மாநிலங்களில் IIT, NIT, IISER போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.

ஆனால், தொலைதூரக்கல்வி மற்றும் அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இந்த ஊக்கத்தொகை பெற முடியாது..

வரவு வைக்கப்படும்: அதன்படியே, அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கல்லூரிகளில் சேர்ந்துள்ள 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் மாதந்தோறும் ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த திட்டத்திற்காக 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ள நிலையில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை இன்றைய தினம் கோவை அரசு கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின், தொடங்கி வைத்தார்.. அப்போது உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் ரூ.1000 உதவித்தொகையையும் வழங்கினார் முதல்வர்.. உதவித்தொகையை பெற்றுக் கொண்ட மாணவர்கள், முதல்வருக்கு தங்கள் நன்றியை மனமார தெரிவித்து கொண்டனர்.

தொடர்ந்து இந்த விழாவில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+