Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

''தாக்குதல் நடத்துனது யாரு, ஏபிவிபியா''? தமிழ்நாடு மாணவர்களிடம் வீடியோ காலில் நலம் விசாரித்த உதயநிதி!

டெல்லி ஜே.என்.யூ.வில் பயிலும் தமிழ்நாடு மாணவர்களிடம் வீடியோ காலில் பேசிய உதயநிதி

Subscribe to Oneindia Tamil

கோவை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாடு மாணவர்களிடம் வீடியோ கால் மூலம் நலம் விசாரித்து தைரியம் அளித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தாக்கியது யார், எத்தனை பேருக்கு காயம் என்பன உள்ளிட்ட கேள்விகளை அவர் இந்த உரையாடலின் போது முன் வைத்தார்.

இது தொடர்பான விவரம் வருமாறு;

நீதி கோரி போராட்டம்

நீதி கோரி போராட்டம்

மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஊர்வலம் நடத்தினர். ஐஐடி வளாகங்களில் விளிம்பு நிலை சமுதாயங்களை சேர்ந்த மாணவர்கள் மர்மமான முறையிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்து வரும் நிலையில் இதன் பின்னணியில் சாதி, மத ஒடுக்குமுறை இருப்பதாக கூறி மாணவர்கள் நீதி கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதயநிதி ஆறுதல்

உதயநிதி ஆறுதல்

பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் படங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் அங்கு பயின்ற தமிழ் மாணவர்களும் பங்கேற்றனர். அப்போது ஏபிவிபி மாணவர் அமைப்புக்கும் இடதுசாரி மாணவர் அமைப்புக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. அதில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் ஜவஹர்லால் நேரு பல்கைக்கழகத்தை சேர்ந்த தமிழ்நாடு மாணவர்களிடம் வீடியோ காலில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

தாக்குதல் நடத்தியது யார்?

தாக்குதல் நடத்தியது யார்?

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ''தலையில் அடிபட்டிருக்கிறதா, ஹாஸ்பிடலில் இருக்கிறீர்களா, எத்தனை பேருக்கு அடிபட்டிருக்கிறது. தாக்குதல் நடத்துனது யாரு, ஏபிவிபியா, சரி தலைவர் இது தொடர்பாக பார்த்துக்கொள்வார்'' எனக் கூறி தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு தைரியமும் ஆறுதலும் தெரிவித்தார். கோவையிலிருந்து ஈரோடு வரை காரில் பயணித்த போது அவர் இந்த வீடியோ காலில் பேசினார்.

வலுக்கும் எதிர்ப்புகள்

வலுக்கும் எதிர்ப்புகள்

இதனிடையே டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வன்மையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+