வெள்ளலூரில் சூப்பர் திட்டம்.. கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் முக்கிய அறிவிப்பு
கோவை: கோவையில் 654 ஏக்கர் பரப்பளவு கொண்ட, வெள்ளலூர் குப்பைக்கிடங்குக்கு கொண்டு வரப்படும் குப்பை, விண்ட்ரோ முறையில் தரம் பிரித்து, உரமாக்க தினமும் 700 மெட்ரிக் டன் குப்பை மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. மக்கும் குப்பை மூலம் தினமும் மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது. வெள்ளலூர் குப்பை கிடங்கில் ரூ.69 கோடியில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறினார்.
கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "654 ஏக்கர் பரப்பளவு கொண்ட, வெள்ளலூர் குப்பைக்கிடங்குக்கு கொண்டு வரப்படும் குப்பை, விண்ட்ரோ முறையில் தரம் பிரித்து, உரமாக்க தினமும் 700 மெட்ரிக் டன் குப்பை மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. மக்கும் குப்பை மூலம் தினமும் மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது. எம்.சி.சி. பிளாண்ட், இயற்கை எரிவாயு கலன் ஆகியவற்றின் மூலம் தினமும் 100 மெட்ரிக் டன் குப்பை மேலாண்மை செய்யப்படுகிறது.

குப்பைக்கிடங்கில் தேங்கியுள்ள பழைய குப்பையை அகற்ற ரூ.60 கோடியில் பயோமைனிங் திட்டத்தை செயல்படுத்தப்பட்டு 54 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. பயோ மைனிங் 2.0 திட்டம் ரூ.58.54 கோடியில் தயாரிக்கப்பட்டு 7.94 லட்சம் மெட்ரிக் டன் குப்பை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மாநகரில் தினமும் சேகரமாகும் மக்கும் கழிவுகளை அகற்ற ரூ.69 கோடியே 20 லட்சத்தில் 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயற்கை எரிவாயு மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. மக்கும் குப்பையை தனியாக சேகரித்து எரிசக்தி உருவாக்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வெள்ளலூர் வளாகத்தை சுற்றிலும் 4,200 மரக்கன்றுகள், சாலையின் இருபுறமும் 800 மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குப்பைக்கிடங்கில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்டத்தொட்டி, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு, குப்பைக்கிடங்கில் 1000 மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் குழாய் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குப்பைக்கிடங்கை 24 மணி நேரமும் கண்காணிக்க பணியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் உரக்கிடங்கு, மண்புழு உர மையம், பயோ மைனிங் போன்ற திட்டங்களை கண்காணிக்க துணை ஆணையாளர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு சிவகுரு பிரபாகரன் ஐஏஏஸ் கூறினார்.
-
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
எல்.பி.ஜி கேஸ் தட்டுப்பாடு.. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்.. சிலிண்டர் முன்பதிவு குறித்த உண்மைகள் -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications