கோவை கார் சிலிண்டர் வெடிப்பு - 5 பேர் கைது- பாய்ந்தது 'ஊபா' ! என்.ஐ.ஏ. விசாரணைக்கு விரைவில் மாற்றம்?
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் மீது ஊபா எனப்படும் பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதனையடுத்து கோவை சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.க்கு மாற்றப்படக் கூடும் என தெரிகிறது.
கோவை உக்கடம் அருகே கோவில் முன்பாக நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கார் சிலிண்டரை வெடிபொருட்கள் மூலம் வெடிக்கச் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

என்.ஐ.ஏ.விசாரித்த முபின்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேசா முபின், 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டவர். இலங்கை தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் கைது செய்யப்பட்ட கோவை அசாருதீனுடன் மிக நெருக்கமாக இருந்தவர் முபின். கேரளா சிறையில் உள்ள அசாருதீனை முபின் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

பாய்ந்தது ஊபா சட்டம்
இதனைத் தொடர்ந்து முபினின் கூட்டாளிகளான முகமது தல்கா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டர். கோவையில் 1998-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான சிறையில் உள்ள அல் உம்மா பாட்ஷாவின் சகோதரர் நவாஸின் மகன்தான் முகமது தல்கா. இவர்கள் அனைவரும் மீதும் ஊபா எனப்படும் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

என்.ஐ.ஏ. விசாரணை?
பொதுவாக ஊபா வழக்குகளை தேசிய புலனாய்வு ஏஜென்சிதான் விசாரிக்கும். என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அதிகார வரம்புக்குள், ஊபா வழக்குகளை விசாரிக்க முடியும். இதனால் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை என்.ஐ.ஏ.-க்கு விரைவில் மாற்றப்படக் கூடும் என கூறப்படுகிறது.

சென்னையில் என்.ஐ.ஏ. போலீஸ் ஸ்டேஷன்
தமிழகம் தொடர்புடைய இத்தகைய வழக்குகளை இதுவரை டெல்லி அல்லது ஹைதாரபாத்தில் உள்ள என்.ஐ.ஏ. போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்வர். அதன்பின்னரே விசாரணைகள் நடத்தப்படும். கடந்த 2020-ம் ஆண்டு சென்னையிலும் என்.ஐ.ஏ. போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை. இது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு தரப்பில் நெருக்கடி தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்தே அண்மையில் சென்னை புரசைவாக்கத்தில் என்.ஐ.ஏ. போலீஸ் ஸ்டேஷன் திறக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இந்த சென்னை ஸ்டேஷனில் முதல் வழக்காக கோவை சம்பவம் விசாரிக்க வாய்ப்புள்ளது என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications