கோவை கார் சிலிண்டர் வெடிப்பு - 5 பேர் கைது- பாய்ந்தது 'ஊபா' ! என்.ஐ.ஏ. விசாரணைக்கு விரைவில் மாற்றம்?
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் மீது ஊபா எனப்படும் பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதனையடுத்து கோவை சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.க்கு மாற்றப்படக் கூடும் என தெரிகிறது.
கோவை உக்கடம் அருகே கோவில் முன்பாக நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கார் சிலிண்டரை வெடிபொருட்கள் மூலம் வெடிக்கச் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

என்.ஐ.ஏ.விசாரித்த முபின்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேசா முபின், 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டவர். இலங்கை தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் கைது செய்யப்பட்ட கோவை அசாருதீனுடன் மிக நெருக்கமாக இருந்தவர் முபின். கேரளா சிறையில் உள்ள அசாருதீனை முபின் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

பாய்ந்தது ஊபா சட்டம்
இதனைத் தொடர்ந்து முபினின் கூட்டாளிகளான முகமது தல்கா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டர். கோவையில் 1998-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான சிறையில் உள்ள அல் உம்மா பாட்ஷாவின் சகோதரர் நவாஸின் மகன்தான் முகமது தல்கா. இவர்கள் அனைவரும் மீதும் ஊபா எனப்படும் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

என்.ஐ.ஏ. விசாரணை?
பொதுவாக ஊபா வழக்குகளை தேசிய புலனாய்வு ஏஜென்சிதான் விசாரிக்கும். என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அதிகார வரம்புக்குள், ஊபா வழக்குகளை விசாரிக்க முடியும். இதனால் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை என்.ஐ.ஏ.-க்கு விரைவில் மாற்றப்படக் கூடும் என கூறப்படுகிறது.

சென்னையில் என்.ஐ.ஏ. போலீஸ் ஸ்டேஷன்
தமிழகம் தொடர்புடைய இத்தகைய வழக்குகளை இதுவரை டெல்லி அல்லது ஹைதாரபாத்தில் உள்ள என்.ஐ.ஏ. போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்வர். அதன்பின்னரே விசாரணைகள் நடத்தப்படும். கடந்த 2020-ம் ஆண்டு சென்னையிலும் என்.ஐ.ஏ. போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை. இது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு தரப்பில் நெருக்கடி தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்தே அண்மையில் சென்னை புரசைவாக்கத்தில் என்.ஐ.ஏ. போலீஸ் ஸ்டேஷன் திறக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இந்த சென்னை ஸ்டேஷனில் முதல் வழக்காக கோவை சம்பவம் விசாரிக்க வாய்ப்புள்ளது என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
-
“யார் அந்த 18 பேர்? அமாவாசை காலத்து டெக்னிக்குடன் கோவை வந்துள்ளார் செந்தில் பாலாஜி”- அண்ணாமலை தாக்கு -
எடப்பாடிக்கு டெல்லி பயம்.. டெல்லிக்கு அமெரிக்கா பயம்.. கனிமொழி செம டைமிங் -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம்












Click it and Unblock the Notifications