Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை சிறுமிகள் பாலியல் வழக்கு: ஜான்ஜெபராஜ், உறவினர் தவிர வேறு யாருக்கும் தொடர்பில்லை - கமிஷனர் தகவல்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்த மத போதகர் ஜான் ஜெபராஜ் மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்றும், சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் புகார் மனு அளிப்பதற்காக வருகிறார்கள். இவர்கள் மனு கொடுப்பதற்காக காத்திருப்பதற்கு அங்கு மரத்தடியில் திறந்தவெளி பகுதியாக இருந்தது. இந்த நிலையில் அங்கு பொதுமக்கள் காத்திருக்கும் போது புத்தகங்கள், செய்தித்தாள்கள் படிப்பதற்கும், வசதியாக அமருவதற்கும் நூலகத்துடன் இருக்கைகள் வசதி தனியார் பங்களிப்புடன் கூடிய பொதுமக்கள் காத்திருப்பு வளாகம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

Coimbatore john jebaraj Sexual harrasment

இந்த காத்திருப்பு வளாகத்தில் 12 இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், அந்தப் பகுதியில் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த வசதியாக வைஃபை வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக இலவசமாகப் புகார்களை அளிக்கலாம். இதை இன்று காவல் ஆணையர் சரவணன் சுந்தர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் பேசுகையில், இன்று கோவை மாநகர காவல் அலுவலகத்தில், enhanced a public waiting area செட்டுடன் கூடிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளோம். மேலும், தமிழக அரசின் திட்டமான, free Wi-Fi zone-ம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஃப்ரீ வைஃபை ஜோனை பொதுமக்கள் பயன்படுத்தி, புகார்களைக் கொடுக்கலாம்.

கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில் துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணை முடிவுற்றவுடன் தகவல் கொடுக்கப்படும். மாணவி தற்கொலை சம்பவத்தைப் பொருத்தவரை, மாணவர்கள் கொடுத்த குற்றச்சாட்டு அனைத்தும் விசாரிக்கப்படும். யாரெல்லாம் புகார் கொடுத்து இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும், போதகர் ஜான் ஜெபராஜ் சார்ந்த மற்றொரு நபரை கைது செய்து இருக்கிறார்கள். செக்சன் 164 இல் அந்தக் குழந்தை என்ன பதில் கொடுத்திருக்கிறதோ, அதைப் பொறுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. பென்னெட் மீது அந்த குழந்தை புகார் தெரிவித்து இருக்கிறது. அதன் பிறகு தான் அவரை கைது செய்து இருக்கிறோம். வேறு யார் மீதும் இதுவரை அந்த குழந்தை புகார் கூறவில்லை என்று கூறினார்.

வைஃபை அரசினுடைய வளர்ச்சித் திட்டம். நம்பிக்கையாக பொதுமக்கள் பயன்படுத்தலாம். கோவையில் பாதுகாப்பிற்காக நிறைய பேட்ரோல்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ரீல்ஸ் மோகம் குறித்த கேள்விக்கு இளைஞர்கள் சமூகத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை உணர்ந்து செய்ய வேண்டும். ஏற்கனவே இது சம்பந்தமாக வந்த புகார்களின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+