இரு நாக்கு உடையவர்கள்... பல ஆண்டுகளாக பார்க்கிறேன்... கமல்ஹாசன் கடும் தாக்கு
Recommended Video

கோவை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா காவல் ஆணையரை சி.பி.ஐ. விசாரிக்க வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி 3 வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மம்தா பானர்ஜிக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

சுயமரியாதை
இந்தநிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது. மம்தா பானர்ஜி தர்ணா போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. சுயமரியாதையுள்ள எந்த அரசும் இதுபோன்ற அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளாது என விமர்ச்சித்தார்.

பேராசையின் உச்சகட்டம்
உடுமலையில் முகாமிட்டுள்ள காட்டு யானை சின்னதம்பி குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், மிருகங்களின் இடத்தை ஆக்கிரமிப்பது பேராசையின் உச்சகட்டம் எனவும், அதற்கான விளைவுகளை நாம் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும் என்றார்.

இரு நாக்கு உடையவர்கள்
மேலும், சின்னதம்பி யானையை கும்கி ஆக்குவது குறித்து தமிழக அரசு இரு வேறு கருத்துகளை தெரிவிப்பது தமிழக அரசின் தனி குணாதிசியம். அவர்கள் இரு நாக்கு உடையவர்கள். நான் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் என்றும் கூறினார்.

ஏளனம் செய்யக்கூடாது
நவீனத்தை ஏளனம் செய்யக்கூடாது. அதே சமயம், ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் அள்ள முடியாது என்பதால் வாளியில் ஓட்டை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கமளித்தார்.

கூட்டணிக்கு அழைப்பு
தமிழகத்திற்கு பேரிடரின் போது வராத மோடி, தற்போது, அடிக்கடி வருவதற்கு தேர்தல் தான் காரணம். மக்கள் அல்ல. பிரதான கட்சிகளில் இருந்து கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதைப்பற்றி விவாதிக்க முடியாது என்று கூறினார்.
-
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications