மூதாட்டின்னு கூட பார்க்கல! வீட்டில் தனியாக இருந்தவரிடம் அத்துமீறிய வடமாநில இளைஞர்கள்! அதிர்ந்த கோவை

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அருகே வீட்டில் இருந்த மூதாட்டியை வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அருகில் கட்டுமான பணி நடந்து வந்த நிலையில் வீட்டில் மூதாட்டி தனியாக இருந்ததை கவனித்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் 65 வயது மூதாட்டி. இவர் தனியாக வசித்து வருகிறார். கூலி வேலைக்கு சென்று அன்றாடம் வீட்டில் சமைத்து சாப்பிட்டு வருகிறார். இவரது வீடு அருகே வீடு கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பணிகளில் வடமாநில இளைஞர்கள் சிலர் தங்கியிருந்து பணி புரிந்து வருகிறார்கள்.

northern-state-youth-arrested-for-misbehave-with-elderly-woman-in-coimbatore

சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த மூதாட்டி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த வட மாநில தொழிலாளிகள் 3 பேர் நைசாக மூதாட்டியின் வீட்டுக்குள் சென்றனர். திடீரென அவர்கள் மூதாட்டியை கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்தனர். மூதாட்டி என்றும் பாராமல் மாறி மாறி பலாத்காரம் செய்தனர்.

இதில் அதிர்ச்சியடைந்து வலி தாங்க முடியாமல் மூதாட்டி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். இதையடுத்து வட மாநில தொழிலாளர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். எனினும் நாலாபுறமும் சூழ்ந்த பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார் இதையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அங்கு வந்த போலீசார் பிடிபட்ட 2 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வடமாநில தொழிலாளர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, கோவை, மதுரை, நெல்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வட மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் தங்கி பணி புரிந்து வருகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மட்டும் அவர்கள் சொந்த ஊர் சென்று வருகிறார்கள்.

இப்படி இங்கு தங்கி வேலை செய்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கின்றன என்று ஒரு புறம் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட சென்னையில் 8 இடங்களில் ஒரே நேரத்தில் செயின் பறித்து சென்ற உத்தர பிரதேச கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்ற ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+