2 ஆண்டுகளுக்கு பின்.. பாலக்காடு - ஈரோடு மெமு ரயில் நாளை முதல் இயக்கம்.. ரயில் பயணிகள் மகிழ்ச்சி!
கோயம்புத்தூர்: பாலக்காடு - ஈரோடு மெமு ரயில் நாளை முதல் மீண்டும் இயக்கப்படுவதால், ஈரோடு, கோவை, திருப்பூரைச் சேர்ந்த ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு பாலக்காட்டில் இருந்து கோவை வழித்தடத்தில் ஈரோட்டுக்கு இயக்கப்பட்டு வந்த மெமு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் பாலக்காடு, கோவை, திருப்பூரில் இருந்து பணிக்கு செல்வோா், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வசதிக்காக இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடா்ந்து பாலக்காடு - ஈரோடு மெமு ரெயில் நாளை முதல் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாளை முதல் வியாழக்கிழமைகள் தவிர பிற்பகல் 2.52 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் மெமு ரயில் (06818) இரவு 7.10 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்தை சென்றடையும். ஜூலை 30-ந் தேதி முதல் வியாழக்கிழமைகள் தவிர காலை 7.15 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் மெமு ரயில் (எண்: 06819) காலை 11.45 மணிக்கு பாலக்காடு டவுன் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூா், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூா், வஞ்சிபாளையம், சோமனூா், சூலூா் சாலை, இருகூா், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை, கோவை, போத்தனூா், மதுக்கரை, எட்டிமடை, வாளையாறு, கஞ்சிக்கோடு உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதேபோன்று ஈரோடு-கோவை மெமு ரயில், நாளை முதல் நேரம் மாற்றி இயக்கப்படுகிறது.
அதன்படி, ஈரோடு-கோவை மெமு ரயில் (06801) காலை 7.15-க்கு பதிலாக 7.50-க்கு புறப்படும். இந்த ரயில் 10.15 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூா், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூா், வஞ்சிபாளையம், சோமனூா், சூலூா் சாலை, இருகூா், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்குப் பின்னர், பாலக்காடு - ஈரோடு மெமு ரயில் நாளை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதால், ஈரோடு, கோவை, திருப்பூரைச் சேர்ந்த ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications