'பன்னி' மடை இல்லையா.. 'பன்னீர்' மடை.. பல ஆண்டு கனவு நினைவாக போகுது.. கோவை அருகே கிராமமே ஹேப்பி
கோவை: கோவை மாவட்டம் பன்னிமடை ஊராட்சியின் பெயர் பன்னீர்மடை என கோவை மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரை செய்துள்ளதால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் பன்னிமடை ஊராட்சியின் பெயரை பன்னீர்மடை என மாற்ற கோவை மாவட்ட நிர்வாகத்தினர் பரிந்துரை செய்துள்ளதால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோயம்புத்தூரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் இருக்கும் இந்த பன்னிமடை கிராமத்தில் அரசு அலுவலகங்களில் 'பன்னிமடை' என்றும், தனியார் வணிக வளாகங்களில் 'பன்னீர் மடை' என்று மாற்றியும் ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்கும் 'பன்னி மடை' என்ற பெயரால் இந்த ஊர் மக்கள் சந்தித்துவரும் அவமானங்கள் ஏராளம். ஆனால் அந்தப் பெயரை மாற்றுவதற்கு இவர்கள் செய்யும் முயற்சிகளை அரசு பல ஆண்டுகளாக கண்டு கொள்ளவே இல்லை.
பன்னிமடை என்று இந்த கிராமத்தை அழைக்க தவறான பெயர் காரணம் இருக்கிறது. எப்படி என்றால், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பொன்னூத்து மலையில் இருந்து சிற்றோடைகள் வழியாக வரும் தண்ணீர் தெளிந்த பன்னீர் போல தேங்கி நிற்கும். அதை மரத்தாலான மடை கொண்டு தேக்கி வைப்பார்கள் . அந்த மடையை திறந்து இந்த கிராம மக்கள் தண்ணீரை குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
இதனால் அந்த பகுதி பன்னீர்மடை என்று கிராம மக்களால் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த பெயர் மருவி பன்னிமடை என்று ஆகி விட்டது. பன்னிமடை என்பது அந்த ஊரின் உண்மையான காரண பெயரை தவறாக சித்தரிப்பதாக தற்போது இருக்கிறது. அந்த ஊர் மக்கள் தங்கள் ஊர்பெயரை சொல்லும் போது, சிலர் கிண்டல் செய்யும் சம்பவங்களும் நடந்து வந்தன.
இதனால் அந்த கிராம மக்கள் பன்னிமடை ஊராட்சி என்பதை பன்னீர்மடை ஊராட்சி என்று அரசு ஆவணத்தில் மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அது பல ஆண்டுகளாக கிடப்பிலேயே கிடந்தது
இந்த நிலையில் கிராம மக்களின் கோரிக்கைக்கு பல வருடம் கழித்து பலன் கிடைத்துள்ளது. தற்போது கோவை மாவட்ட நிர்வாகம் பன்னிமடை ஊராட்சி என்பதை பன்னீர்மடை ஊராட்சி என்று பெயர் மாற்றம் செய்ய பரிந்துரை செய்திருக்கிறது. இதற்கு ஊராட்சி மன்றத்தின் தீர்மான நகல் கூடிய முன்மொழிவுகள், ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து சென்னையில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது..
இதனால் பன்னிமடை ஊராட்சி என்பது விரைவில் பன்னீர் மடை ஊராட்சி என்று பெயர் மாற்றம் அடைய போகிறது. இதனால் பன்னீர்மடை பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதை அந்த கிராம மக்கள் பேனர் வைத்துகொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications