கோவை ஏடிஎம்களில் பணம் இல்லை.. குறட்டை விட்டு ஹாயாக தூங்கிய குடிகாரரால் பரபரப்பு!
Recommended Video

கோவை: கோவை ஏடிஎம்கள் பலவற்றிலும் பணம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருவிழாக் காலங்களில் ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை ஏற்படுவது சகஜம்தான். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி பணம் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதற்கு வங்கிகள் சரியான காரணத்தை ஒரு போதும் சொல்வதில்லை.

நேற்று சென்னை வந்த ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடு கூட இதைக் குறிப்பிட்டுப் பேசினார். ஏடிஎம்களில் பணம் இருக்கா என்று அவர் செய்தியாளர்களிடம் கேட்டார். இந்த நிலையில் கோவையில் இன்று காலை முதலே நூற்றுக்கணக்கான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை.

இதுகுறித்து வங்கிகள் தரப்பில் கேட்டால் சர்வர் டவுன் என்று பதில் வருகிறதாம். இதுகுறித்து பணம் எடுக்க வந்து ஏமாந்த ஒருவர் கூறுகையில் எங்குமே பணம் கிடைக்கவில்லை. பணம் இல்லாமல் என்ன செய்வது. இங்க பாருங்க, குடிகாரன் உள்ளே படுத்திருக்கான். இப்படி இருந்தால் எப்படி என்று புலம்பினார்.

அவர் சுட்டிக் காட்டிய ஏடிஎம் மையத்திற்குள் ஒரு குடிகாரர் ஜாலியாக வாசலை அடைத்துக் கொண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். கோவை முழுவதும்தான் இப்படி என்று இல்லை. சில நாட்களுக்கு முன்பு சென்னையிலும் கூட பல இடங்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர் என்பது நினைவிருக்கலாம்.
[தங்க தமிழ்ச்செல்வனின் அடேங்கப்பா உண்ணாவிரதம்.. ஆண்டிப்பட்டியே ஆடிப் போய்க் கிடக்கு!]
நாளை சுபமுகூர்த்த நாள் என்பதால் ஏடிஎம்களில் பணம் போட்டு வைக்க வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications