ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு எதிர்ப்பு.. கோவையில் போராடிய பெரியார் திராவிடர் கழகத்தினர் குண்டுகட்டாக கைது!
கோயம்புத்தூர்: ஆர்எஸ்எஸ் சாகாவிற்கு எதிராக கோயம்புத்தூரில் போராடிய பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் உத்தரவை மீறி போராடியதால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல இடங்களில் தனியார் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா நடப்பதாக கடந்த சில நாட்களாக புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பள்ளிகளில் பயிற்சி நடப்பதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அங்கு இருக்கும் பிரபல பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கூட்டமாக வந்து பயிற்சிகளை அளித்து வருகின்றனராம்.

பள்ளிகள் ஆர்எஸ்எஸ்
முன்பு கல்லூரிகளில் இதுபோல ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக சாகா நடத்தப்பட்டது வந்தது. அப்போதே இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில்தான் தனியார் பள்ளிகளில் இப்படி சாகா நடப்பதாக புகார் எழுந்தது. இங்கு சாகாவின் போது கம்பு சுற்றுதல், உறுதி மொழி எடுத்தல் போன்ற பயிற்சிகள் எடுப்பதாகவும் கூறப்பட்டது.

ஆர்எஸ்எஸ் சாகா
கோவை பள்ளிகளில் நடக்கும் ஆர்எஸ்எஸ் சாகாவிற்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் இதுகுறித்து போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். ஆனால் போலீசார் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து இன்று கோவை விளாங்குறிச்சி சாலையில் அமைந்து உள்ள தனியார் பள்ளியில் மீண்டும் ஆர்எஸ்எஸ் சாகா ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆர்எஸ்எஸ் பெரியார்
இதற்கு அனுமதி அளிக்க கூடாது என்று பெரியார் திராவிடர் கழகத்தினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த சாகாவிற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதையடுத்து பெரியார் திராவிடர் கழகத்தினர் பயிற்சி நடக்கும் பள்ளிக்கு முன்பாக போராட்டம் செய்தனர். பெரியார் திராவிடர் கழகத்தினர் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

ஆர்எஸ்எஸ் கோயம்புத்தூர்
இந்த போராட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 45 பேரை போலீசார் கைது செய்து ஜீப்பில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications