அரசு பள்ளியில் ஆர்எஸ்எஸ்.. காக்கி டவுசருடன் “ஷாகா” பயிற்சி! கோவையில் “பரபர”.. தபெதிக ஆர்ப்பாட்டம்
கோவை: அரசு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். முகாம் நடத்தப்பட்டதை கண்டித்து தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதும் ஷாகா என்ற பெயரில் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாமில் மதவெறி ஊட்டப்படுவதுடன், ஆயுதப்பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
ஆனாலும், தமிழ்நாட்டின் பல இடங்களில் ஷாகா பயிற்சிகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், பள்ளி சிறுவர்கள் தொடங்கி முதியோர்கள் வரை பலருக்கும் அளித்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன.

பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி
குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு சர்ச்சையாகி இருக்கின்றன. குறிப்பாக கன்னியாகுமரி, சென்னை, தஞ்சாவூர், கோவை என பல மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
இந்த நிலையில் கோவையில் உள்ள தேவாங்க அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி வகுப்பு நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காக்கி டவுசர் அணிந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயிற்சியில் ஈடுபடுவதை ரகசியமாக யாரோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட தற்போது அது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

கோவை அரசு பள்ளி
இந்த நிலையில் கோவையில் உள்ள தேவாங்க அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி வகுப்பு நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காக்கி டவுசர் அணிந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயிற்சியில் ஈடுபடுவதை ரகசியமாக யாரோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட தற்போது அது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மாநகராட்சி விளக்கம்
அரசு பள்ளியில் 18 பேர் ஆர்எஸ்எஸ் உடை அணிந்து பயிற்சி வகுப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கோவை மாநகர ஆணையர் பிரதாப் அளித்துள்ள விளக்கத்தில், "கோவை மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி தரப்படவில்லை. அரசு பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடைபெற்றது குறித்து உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளோம்.

வழக்குப்பதிவு
அரசு பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக மாநகராட்சி சார்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்." என்றார். இது தொடர்பாக கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தபெதிக ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பு நடத்தப்பட்ட கோவை தேவாங்க அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொடிகளை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த அமைப்பின் தலைவர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications