அதிரடி..கோவை பாஜக அலுவலக பெட்ரோல் குண்டு வீச்சு.. கைதானவர்கள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம்
கோவை : கோவையில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான 2 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. குறிப்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களை குறிவைத்து இந்த பெட்ரோல் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
கோவை, ஈரோடு, சேலம், மதுரை, சென்னை, கன்னியாகுமரி உள்பட பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
இந்த பெட்ரோல் குண்டு வீச்சின் துவக்க புள்ளி என்பது கோவையின் பாஜக அலுவலகமாகும். கடந்த மாதம் 22ம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் அமைந்துள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை.

கண்காணிப்பு கேமராவில் பதிவு
இதனை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அடுத்தடுத்து பிற இடங்களில் பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் தமிழகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

2 பேர் அதிரடி கைது
இந்த விசாரணையின் அடிப்படையில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சேரன் காலனியை சேர்ந்த சதாம் உசேன் (வயது 32), துடியலூர் ஆர்எஸ் தோட்டம் நேரு வீதியைச் சேர்ந்த அகமது சிகாபுதீன் (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
இவர்கள் 2 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுபற்றி போலீசாரும் பரிசீலனை செய்து வந்தனர். இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி, 2 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான நகல்கள் இன்று கோவை மத்திய சிறையில் 2 பேரிடமும் வழங்கப்பட்டது.
-
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications