அண்ணா சாப்பிடாதீங்க ப்ளீஸ்.. பிரியாணி இலையை பீடித்துண்டு என நினைத்து.. ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பிரபல அசைவ ஹோட்டலில் பிரியாணியை ஆர்டர் செய்த இளைஞர் மது போதையில் இருந்ததால் பிரியாணியில் இருந்த பிரியாணி இலையை பீடித்துண்டு என நினைத்து ஹோட்டலுக்கு நேரடியாகச் சென்று ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் எஸ். எஸ். ஹைதராபாத் பிரியாணி என்ற பிரபல அசைவ உணவகம் இயங்கி வருகின்றது. இந்த உணவகத்தில் சத்தியநாராயணன் என்ற இளைஞர் ஒருவர் பிரியாணியை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். போதையில் இருந்த இவர் ஆர்டர் செய்த பிரியாணியை சாப்பிட்டுள்ளார்.

மதுபோதையில் பிரியாணியை சத்தியநாராயணன் ருசித்துக் கொண்டிருந்தபோது சத்தியநாராயணன், வாயில் ஒரு இலை தட்டுப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இலையை பீடித்துண்டு என்று கடும் ஆத்திரமடைந்துள்ளார் சத்தியநாராயணன். இதையடுத்து, காந்திபுத்தில் உள்ள எஸ்.எஸ் பிரியாணி கடைக்கு நேரில் சென்று சண்டை போட்டுள்ளார்.
போதை தலைக்கேறிய நிலையில் ஹோட்டலில் ரகளையில் ஈடுபட்டது குறித்த தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது, விசாரிக்க வந்த போலீசாரையும் அந்த இளைஞர் வசைபாடி இருக்கின்றார். ரோட்டில் நின்று கூச்சலிட்டு போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்திருக்கின்றார். இதையடுத்து எஸ். எஸ். பிரியாணி தரப்பில் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட போதை நபர் சத்தியநாராயணனை அழைத்து போலீசார் விசாரித்து இருக்கின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் சத்திய நாராயணன் பிரியாணி இலையை உட்கொண்டு விட்டு, பீடி இலை என்று உளறியது தெரியவந்துள்ளது. போதை தெளிந்த பிறகு காவல் நிலையத்தில், தான் தவறு செய்து விட்டதாகவும், இனி இதுபோன்று நடந்து கொள்ள மாட்டேன் என்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் தந்திருக்கின்றார்.

பிரியாணி கடை ஊழியர்களை மட்டுமல்லாமல் விசாரணைக்கு சென்ற போலீசாரையும் தவறாக வசை பாடி, நடுரோட்டில் சாலை போக்குவரத்துக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டதாலும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் சாலை போக்குவரத்துக்கு இடையூறாகவும் செயல்பட்டதாக சத்தி நாராயணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தாரிடம் விசாரித்தபோது, சத்தியநாராயணன் மனரீதியாக மிகுந்த அழுத்தத்தில் உள்ளதாகவும், அவ்வப்போது இதுபோன்று நடந்து கொள்வதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், தற்போது சத்யநாராயணன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். மது போதையில் பிரியாணி இலைக்கும் , பீடி இலைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஹோட்டலில் இளைஞர் தகராறில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications