அடுக்கடுக்கான கேள்விகள்! கோடநாடு கொலை கொள்ளை வழக்கு.. சயானிடம் போலீசார் தீவிர விசாரணை
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது ஜாமீனில் உள்ள சயானிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களா அமைந்துள்ளது.
இந்த கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இந்த வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கோடநாடு வழக்கு
இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவ்வழக்கு தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர். இவர்கள் இப்போது ஜாமீனில் உள்ளனர். இவ்வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் கோவை, சேலம், நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் 220க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணை
இந்த வழக்கில் விசாரணை நடத்தக் கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் நேரடி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணை சில வாரங்களாகவே மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. இத்தனிப்படை போலீசார் வழக்கில் ஏற்கனவே கைதானவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சந்தேகத்துக்குரிய நபர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சயான்
அதன்படி கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சேலத்தில் வசித்து வந்த சயானை விசாரணைக்கு ஆஜராகும்படி தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி, சயான் இன்று (மே 9) மதியம் கோவை போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் கோடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலை தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டு போலீசார் விசாரித்தனர்.

கேள்வி
சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜூடன் எப்படி அறிமுகம் ஏற்பட்டது, கொள்ளை சம்பவத்துக்குத் திட்டமிட்டது யார், கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது, இந்த வழக்கில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. மேலும், இந்தச் சம்பவத்தில் அரசியல் பிரமுகர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் சயானிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications