பொள்ளாச்சி கொடூரம்… முழுமையாக ஆடியோ, வீடியோவை வெளியிடாதது ஏன்?... பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி
Recommended Video
கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவர் குடும்பத்தினர் வெளியிட்ட ஆடியோ, வீடியோவை முழுமையாக வெளியிடாமல் உண்மையை மூடி மறைக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆதாரங்கள் இருந்தால் வெளியிடுங்கள் என்றும் கூறினார்.
தனது மகன்கள் வெளிநாடு தப்பிச் செல்லவில்லை என்றும் வதந்தியைப் பரப்ப வேண்டாம் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம், சிபிசிஐடி போலீசார் தன்னிடம் விசாரணை நடத்தியதாகவும் அவர் விளக்கம் அளித்தார். அப்போது சில ஆதாரங்களை அவர்களிடம் அளித்ததாகவும் கூறினார்.
இரவே திருவாரூர் சென்ற ஸ்டாலின்.. அதிகாலையில் அமோகமாக தொடங்கியது பிரச்சாரம்!
முன்னதாக, இளம் வயது பெண்களுக்கு ஒரு தந்தை போல் தேவையான அனைத்து உதவிகளையும் கண்டிப்பாக செய்வேன். யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் கொடிய குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக கேட்கிறேன் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்திருந்தார். மேலும், பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கை இண்டர்போல் கூட விசாரிக்கட்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசமாக கூறினார்.
[இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்]
பொள்ளாச்சி விவகாரத்தில் தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் அவதூறு பரப்பப்படுவதாகக் கூறிய அவர், தங்கள் மீதான புகார்களுக்கு ஆதாரம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார். தேர்தல் நேரத்தில் அதிமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே அவதூறு பரப்பப்படுகிறது எனவும் அவர் கூறினார்.