1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு.. ரேஷன் கடையில் இன்னும் டோக்கன் வாங்கலையா.. அரசு முக்கிய அறிவிப்பு
கோவை: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் டோக்கன் பெறாதவர்களுக்கு இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ரேஷன் கடைகளில் டோக்கன் பெறாத 2½ லட்சம் பேருக்கு இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
தமிழர்கள் முக்கியமான பண்டிகையான தைப் பொங்கலை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். வழக்கமாக பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாடு அரசு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்புடன் ரொக்கப்பணத்தை பொங்கல் பரிசுத்தொகுப்பாக வழங்கி வருகிறது.

அந்த வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு உள்ளடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று முன்தினம் முதல் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்காக வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 10-ந் தேதி (நேற்று) முதல் 14-ந் தேதி வரை (நாளை மறுநாள்) வரை பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளிலும் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பொங்கல் பரிசுத்தொகுப்பினை முடிந்தவரை வேகமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வருகிற ஜனவரி 14-ந் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. அதேநேரம் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் வசிக்கும் ஏராளமானோர் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக இன்றும், நாளை, நாளை மறுநாள் தான் செல்வார்கள் என்பதால், 13, 14 ஆகிய தேதிகளில் டோக்கன் பெற்றவர்கள் பரிசுத்தொகுப்பை குறிப்பிட்ட தேதியில் பெற முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே சொந்த ஊர் செல்பவர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பின்பு பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு, ரூ.1,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை வழங்கப்பட உள்ளது. அதாவது பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் பெறாதவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 40 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ள்ள நிலையில், இதில் 11 லட்சம் கார்டுகள் அரிசி கார்டுகள் ஆகும். கடந்த ஆண்டு 11 லட்சம் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 8 லட்சத்து 56 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் பொங்கல் தொகுப்பு வழங்க டோக்கன் வினியோகம் செய்யப்பட்டிருந்தது.
அனைத்து அரிசி ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில்,கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நாளில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 864 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
2-வது நாளாக நேற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கும் பணி கோவை மாவட்டம் முழுவதும் நடந்தது. இதில், ஆனைமலை தாலுகாவில் 18 ஆயிரத்து 417 பேருக்கும், அன்னூரில் 19 ஆயிரத்து 61 பேருக்கும், கோவை வடக்கு மண்டலத்தில் 35 ஆயிரத்து 421 பேருக்கும், தெற்கு மண்டலத்தில் 28 ஆயிரத்து 857 பேருக்கும், மேற்கு மண்டலத்தில் 29 ஆயிரத்து 33 பேருக்கும், கிணத்துக்கடவு தாலுகாவில் 10 ஆயிரத்து 703 பேருக்கும், மதுக்கரை தாலுகாவில் 25 ஆயிரத்து 935 பேருக்கும், மேட்டுப்பாளையம் தாலுகாவில் 24 ஆயிரத்து 241 பேருக்கும், பேரூர் தாலுகாவில் 34 ஆயிரத்து 256 பேருக்கும், பொள்ளாச்சி தாலுகாவில் 25 ஆயிரத்து 715 பேருக்கும், சூலூரில் 29 ஆயிரத்து 499 பேருக்கும், வால்பாறை தாலுகாவில் 2 ஆயிரத்து 722 பேருக்கும் என மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 860 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மொத்தம் 5 லட்சத்து 51 ஆயிரத்து 724 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் டோக்கன் பெறாத 2½ லட்சம் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை ரூ.1000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications