கோவை சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. கழுத்தை நெரித்ததாக பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் 7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியில் குடியிருந்து வருபவர் பிரதீப் மற்றும் வனிதா. துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.

இவர்களுக்கு 5 மற்றும் 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 7 வயது பெண் குழந்தை அருகில் உள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

குழந்தை காணாது தேடிய பெற்றோர்

குழந்தை காணாது தேடிய பெற்றோர்

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் காணாமல் போன குழந்தையின் வீட்டருகே உள்ள சிறிய சந்தில் முகத்தில் டிசர்ட் சுற்றப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸுக்கு தகவல்

போலீஸுக்கு தகவல்

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் காணாமல் போன குழந்தையில் வீட்டருகே உள்ள சிறிய சந்தில் முகத்தில் டிசர்ட் சுற்றப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அறிக்கை

அறிக்கை

இதையடுத்து அது காணாமல் போன பிரதீப்பின் குழந்தை என்பது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கை தற்போது வெளியானது.

கழுத்தை நெரித்து கொலை

கழுத்தை நெரித்து கொலை

அதில் கோவை சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்டு, நரம்புகள் துண்டாகி இறந்தார். சிறுமியின் கழுத்தில் கயிறு போன்ற ஒரு பொருளை வைத்து இறுக்கி கொலை செய்ததாகவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+