17 பேர் பலியான பயங்கரம்.. உறவினர்கள் போராட்டம்.. போலீஸ் தடியடி.. பதற்றத்தில் மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில் கட்டிட விபத்தில் உயிரிழந்த 17 பேரின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதும், அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேட்டுப்பாளையம் அருகே நடூர்- ஏடிக்காலனி பகுதியில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் இன்று, அதிகாலை 3 மணிக்கு, காம்பவுண்ட் சுவர் இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்த 17 பேர் உடல்களும் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களின் உறவினர்கள் மருத்துவமனைகளில் குவிந்துள்ளதால் அங்கு ஓயாத அழுகை சத்தம் எதிரொலித்து எப்படி இருந்தது.
ஜவுளிக்கடை உரிமையாளர், ஆறுமுகம் என்பவரின் சுற்றுச்சுவர் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் தான் அக்கம்பக்கத்து வீடுகள் இடிந்து விழுந்தன என்றும் எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்றும், 17 பேரின் உறவினர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக, இன்று மேட்டுப்பாளையம் மெயின் ரோடு பகுதியில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த நிலையில், மீண்டும் மாலையில் மருத்துவமனையில் பிணவறை இருக்கக்கூடிய பகுதியில் உறவினர்கள் திடீரென போராட்டம் நடத்தினர்.

கட்டிட விபத்தில் உயிரிழந்தோருக்கு வழங்கப்பட்ட நிதி உதவியை அதிகரிக்க வேண்டும், விபத்துக்கு காரணமாக கூறப்படும் ஆறுமுகம் என்பவரை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர்.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். அப்போது போலீசார் மற்றும் உறவினர்கள் நடுவே ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications