கோவையில் அதிரடி.. ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.. 2 கால்களிலும் பாய்ந்த குண்டுகள்
கோவை: கோவையில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஆல்வின் தலைமை காவலரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற நிலையில் அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு அதிரடியாக கைது செய்தனர். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆல்வினின் 2 கால்களிலும் குண்டுகள் பாய்ந்தன.
கோவை மாநகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தவர் ஆல்வின். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரது பெயர் போலீசாரின் ரவுடி பட்டியலில் உள்ளது.

ஆல்வினுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஆல்வினை பிடிக்க கோவை தனிப்படை போலீசார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே தான் போலீசாருக்கு நேற்று நள்ளிரவு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
அதாவது ரவுடி ஆல்வின் கோவை கொடிசியா பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கொடிசியா பகுதிக்கு சென்று ஆல்வின் பதுங்கிய இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை பார்த்த ஆல்வின் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அந்த சமயத்தில் தலைமை காவலர் ராஜ்குமார், ஆல்வினை பிடித்தார்.
இதனால் கோபமடைந்த ஆல்வின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலைமை காவலர் ராஜ்குமார் கையில் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடினார். போலீசார் அவரை சரணடைய கூறினர். ஆனால் அவர் சரண் அடையாமல் எஸ்கேப் ஆக முயன்றார். அதுமட்டுமின்றி பிடிக்க சென்ற போலீசாரை தொடர்ந்து தாக்கவும் முயற்சித்தார்.
இந்த வேளையில் உதவி காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டு சரணடையும்படி எச்சரிக்கை செய்தார். ஆனால் ஆல்வின் தொடர்ந்து ஓடியதோடு அவரை நெருங்கிய போலீசாரை கத்தியால் குத்தவும் முயன்றார். இதனால் பாதுகாப்பு கருதி உதவி காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், ஆல்வினை நோக்கி துப்பாக்கியால் 2 முறை சுட்டார். இதில் ஆல்வினின் 2 கால்களிலும் குண்டுகள் பாய்ந்தன.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு கீழே விழுந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேபோல் ஆல்வின் கத்தியால் குத்தியதில் காயமைடைந்த தலைமை காவலர் ராஜ்குமாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications