நைட் 11 மணிக்கு வரேன்! பாயை எடுத்து வை! அதிர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி! பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஒருவர், 9ஆம் வகுப்பு மாணவியிடம் இரவு 11 மணிக்கு வரேன் பாயை எடுத்து வை என கூறியதை அடுத்து அந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கண்ணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமியின் மகன் அய்யாசாமி. இவருக்கு வயது 39.

நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் அறிவியல் நடைமுறை வகுப்பு எடுக்க இந்த பள்ளிக்கு அய்யாசாமி வந்தார். அவர் 7ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்தார்.
அப்போது அந்த பள்ளியில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர், "சார் எங்கள் கிளாஸுக்கு எப்போ வருவீங்க" என கேட்டுள்ளார். அதற்கு அய்யாசாமி, "இரவு 11 மணி வரேன், பாயை எடுத்து வை" என ஆபாசமாக கூறியதாக தெரிகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, பெரியநாயக்கன்பாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த மாணவிக்கு உதவியாக பள்ளி தலைமை ஆசிரியரும் இருந்தாராம். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சோபியா, ஆசிரியர் அய்யாசாமியிடம் விசாரணை நடத்திய நிலையில் அவர் , அந்த மாணவியிடம் கூறியது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து அய்யாசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்வேறு பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதை அடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு புகாரின் உண்மைத் தன்மை கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications