4அடி நல்ல பாம்பையும் விட்டு வைக்காத கோவை குளிர்.. ஹெல்மெட்டுக்குள் புஸ் புஸ் சத்தம்.. இளைஞருக்கு ஷாக்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் மழை, மாலை, இரவு வேளைகளில் கடும் குளிர் என ஊரே சில்லென்று நிலவி வருகிறது. இதனால், பாம்புகள் இதமான இடங்களைத் தேடி தஞ்சமடைந்து வருகின்றன. இந்நிலையில், கோவை கொடிசியா அருகே உள்ள லூலு மால் வேர்ஹவுஸில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் வாகனத்தில் மாட்டி வைத்திருந்த ஹெல்மெட்டுக்குள் குளிருக்கு இதமாக 4 அடி நல்ல பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே பூச்சிகள், பாம்புகள் படையெடுக்கத் தொடங்கிவிடும். மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பொந்துகள், புதர்களில் இருந்து வெளிவரும் பாம்புகள் வீடுகளுக்குள், வாகனங்களுக்குள் புகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

coimbatore-snake-man-in-coimbatore-was-shocked-to-find-a-4-foot-snake-inside-his-helmet

குளிருக்கு கதகதப்பாக வைக்கும் வகையில் இடங்களைத் தேர்வு செய்து பாம்புகள் புகுந்துவிடுகின்றன. பொதுவாக மழைக்காலங்களில் பூச்சியினங்கள், தவளைகள், தேள் போன்றவற்றின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். அவற்றை பிடிப்பதற்காக இரை தேடி வரும் பாம்புகள் தவறுதலாக வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகின்றன.

இந்நிலையில், கோவை கொடிசியா அருகே உள்ள லூலு மால் வேர்ஹவுஸில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் வாகனத்தில் மாட்டி வைத்திருந்த ஹெல்மெட்டுக்குள் குளிருக்கு இதமாக 4 அடி நல்ல பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், கொடிசியா அருகே உள்ள லூலுமால் வேர்ஹவுஸிஸ் பார்க்கிஸ் உள்ளது. அந்த பார்க்கிங்கில் புல்லட் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் ஹெல்மெட் தொங்க விடப்பட்டிருந்துள்ளது. அவ்வழியாக வந்த 4 அடி நல்ல பாம்பு குளிருக்கு இதமாக உடலை கதகதப்பாக வைத்துக் கொள்வதற்காக அந்த ஹெல்மெட்டுக்குள் புகுந்துள்ளது.

இந்நிலையில், இருசக்கர வாகன உரிமையாளர் சங்கர் வண்டியை எடுப்பதற்காக பார்க்கிங் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, ஹெல்மெட்டை எடுக்க முயன்றபோது அதற்குள்ளே பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, உடனடியாக பாம்பு பிடிக்கும் வீரருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து உடனடியாக வந்த பாம்புபிடி வீரர் 4 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டத்தில் காலை, மாலை வேளைகளில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், கதகதப்பான இடங்களைத் தேடி பாம்புகள் வெளியே வருகின்றன. எனவே, ஷூ, ஹெல்மெட், வெளியில் வைக்கப்பட்டுள்ள பொருள்களை எடுக்கும்போது மிகுந்த கவனமாகக் கையாள வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+