கோவை தனியார் கல்லூரியில் பட்டப்பகலில் பயங்கரம்! மாணவிக்கு கத்திக்குத்து! சக மாணவன் வெறிச்செயல்!
கோவை: கோவையில் தனியார் கல்லூரியில் தன்னை காதலிக்க மறுத்த மாணவியை சக மாணவர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அந்த மாணவிக்கு கை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிக்ச்சை பெற்று வருகிறார்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் துடியலூர் சாலையில் இயங்கி வருகிறது தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரியில் 18 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அவருடன் ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மாணவர் ஹர்ஷவர்தன். இவர் அந்த மாணவியை 3 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவரது காதலை அந்த மாணவி ஏற்கவில்லையாம்.
தன்னை காதலிக்குமாறு அந்த மாணவியிடம் ஹர்ஷவர்தன் பலமுறை கேட்டு அவர் மறுத்துவிட்டாராம். இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த அந்த மாணவியை ஹர்ஷவர்தன் தடுத்து நிறுத்தினாராம்.
அப்போது தன்னை காதலிக்குமாறு மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போதும் அந்த மாணவி மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த ஹர்ஷவர்தன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை குத்தினார்.
இதனால் மாணவிக்கு கழுத்து, கைகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்த மாணவர்களும் பேராசிரியர்களும் ஓடி வந்ததை கண்ட ஹர்ஷவர்தன், அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம்.
இதையடுத்து மாணவியை மீட்டு அந்த கல்லூரி குழுமத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த மாணவனை தேடி வருகிறார்கள்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications