நந்தினி - நிரஞ்சனா நினைவிருக்கா? ஆர்எஸ்எஸ்ஐ எதிர்த்து போராடி கைதாகி 52 நாளுக்கு பின் ஜாமீனில் ரிலீஸ்
கோவை: ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடத்தியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சகோதரிகள் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் 52 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார்கள்.
ஊட்டியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை கண்டித்து வழக்கறிஞர் நந்தினியும் அவரது சகோதரி நிரஞ்சனாவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒரு மாதம் கடந்தும் இருவரும் விடுவிக்கப்படாத நிலையில் நந்தினியின் தந்தை ஆனந்தனும் கணவர் குணாவும் பேஸ்புக்கில் ஒருவர் பதிவை வெளியிட்டனர். அதில், "ஊட்டியில் ஒரு வாரம் ஆர்.எஸ்.எஸ். சதி ஆலோசனை கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தது.
ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கியது. ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை எதிர்த்து அறவழி போராட்டம் நடத்திய நந்தினி - நிரஞ்சனாவை அராஜகமாக கைது செய்தது. பொய் வழக்கில் 48 நாட்களாக கோவை மத்திய சிறையில் அடைத்து வைத்திருப்பது. நந்தினி - நிரஞ்சனாவை சிறையில் சந்திக்க கூட அனுமதி மறுப்பது.
போன் மூலம் தொடர்பு கொண்டு குடும்பத்தினருடன் பேசுவதை தடை செய்திருப்பது என தொடர்ந்து திமுக அரசு செயல்பட்டது. திமுக அரசு தனது தவறை திருத்திக் கொண்டு நந்தினி - நிரஞ்சனா இருவர் மீதும் போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்து நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என இவ்வளவு நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
அதற்காகவே பிணை கோராமல் 48, நாட்கள் பொறுமையாக காத்திருந்தோம். ஆனால் திமுக அரசு மாறுவதற்கு துளியும் தயாராக இல்லை. எனவே இனியும் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதாலும் அடுத்தடுத்து செய்ய வேண்டிய களப்பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் நந்தினி - நிரஞ்சனா இருவருக்கும் பிணை கோரி நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளோம்." என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இருவரையும் ஜாமினில் விடுவிக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த சூலூர் நீதிமன்றம் ஜாமினில் விடுத்து உள்ளது. இதனை அடுத்து இருவரும் இன்று சிறையில் இருந்து வெளியே வந்தனர். இது குறித்து நந்தினியின் பேஸ்புக்கில் ஆனந்தனும் குணாவும் பதிவிட்டு உள்ளார்கள்.
அதில், "நந்தினி - நிரஞ்சனா விடுதலை. 52 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் விடுதலை. தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்க தொடர்ந்து சதி செய்து வரும் ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பல் ஊட்டியில் ரகசிய சதி கூட்டம் நடத்தியதை எதிர்த்து போராடிய நந்தினி - நிரஞ்சனா இருவரையும் திமுக அரசின் காவல்துறை கடந்த 13.07.23 அன்று பொய் வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்து வைத்திருந்தது.
பொய் வழக்கை ரத்து செய்து சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக்கோரி பிணை கோராமல் சிறையில் இருந்தனர். ஆனால் 50 நாட்களுக்கு மேலாகியும் திமுக அரசு இக்கோரிக்கைக்கு செவி சாய்க்காத நிலையில் பிணை கோரி சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம்.
இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நந்தினி - நிரஞ்சனா இருவருக்கும் பிணை வழங்கி நேற்று (01.09.23) உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இன்று 02.09.23) நந்தினி - நிரஞ்சனா இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். நந்தினி - நிரஞ்சனா இருவரின் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications