மேட்டுப்பாளையம்: சுவர் இடிந்த விபத்தில் இறந்த இரு குழந்தைகளின் கண்களை தானமாக கொடுத்த தந்தை
கோவை: மேட்டுப்பாளையத்தில் கருங்கல் சுவர் இடிந்த விபத்தில் பலியான இரு குழந்தைகளின் கண்களையும் தந்தை ஒருவர் தானமாக தந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் கடந்த திங்கள்கிழமை அன்று பெய்த கனமழையால் 20 அடி உயரத்திலான சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 3 வீடுகள் தரைமட்டமாகின. அந்த வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருபவர் செல்வராஜ். இவரது மனைவி லட்சுமி பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு நிவேதா, ராமநாதன் ஆகிய மகள், மகன் இருந்தனர்.

17 பேர் பலி
கல்லூரி படிக்கும் நிவேதாவும் 10ம் வகுப்பு படிக்கும் ராமநாதனும் தங்களது தாயின் தங்கையான சித்தியிடம் வளர்ந்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் சித்தி சிவகாமி வீட்டில் தூங்கினர். அப்போதுதான் கருங்கல் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் பலியாகிவிட்டனர்.

நிர்கதியாய் நிற்கும் செல்வராஜ்
அந்த 17 பேரில் நிவேதா, ராமநாதனும், சித்தி சிவகாமியும், அவரது மகள் வைதேகியும் அடங்குவர். ஏற்கெனவே மனைவியை இழந்த செல்வராஜ் தற்போது ஒரே ஆதரவான மகள், மகனையும் இழந்துவிட்டார். தற்போது யாரும் இல்லாமல் நிர்கதியாய் நிற்பதாக கதறி அழுகிறார் செல்வராஜ்.

நிவேதா ராமநாதன்
தனது மகன், மகள் ஆகியோரின் கண்களை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவமனையில் செல்வராஜ் தானம் அளித்துவிட்டார். தற்போது நிவேதாவும் ராமநாதனும் இறந்து 4 பேரின் வாழ்வில் ஒளியேற்றுவர்.

நெகிழ்ச்சி
சொந்தம் என சொல்லிக் கொள்ள செல்வராஜிக்கு யாரும் இல்லை. குடும்ப உறவுகளை எல்லாம் இழந்த சோகத்திலும் 4 பேருக்கு பார்வை கிடைக்க செல்வராஜ் உதவி செய்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications