'ஜெயிச்சி தான் பரிசு வாங்குவேன்..' சபதம்போட்டு பரிசை வென்ற சிறுமி.. கோவை ஜல்லிக்கட்டில் மாஸ் சம்பவம்
கோவை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஆறுதல் பரிசு பெற மறுத்த இளம்பெண் யோகதர்ஷினியின் காளை கோவை ஜல்லிக்கட்டில் கலக்கியது.
Recommended Video
தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா உலகெங்கும் உள்ள தமிழர்களால் கடந்த வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி கிராமங்களில் நமது கலாசார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகள்
தமிழ்நாட்டில் தற்போது ஓமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவா மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்கள் அனுமதியில்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் களம் இறக்கப்பட்ட 873 காளைகளை 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு களமாடினர்.

வீர தமிழச்சி யோகதர்ஷினி
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாடுகளுக்கு அண்டா மற்றும் ஹாட் பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டன. குறிப்பாக, இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டம், ஐராவதநல்லூரை சேர்ந்த யோகதர்ஷினி என்பவரது காளை மீது பெரியளவில் எதிர்பார்ப்பு நிலவியது. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். யோகதர்ஷினியின் தந்தை முத்து பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் நிலையில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

அவனியாபுரம்
ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்கப்பட்ட சமயத்தில் அதை எதிர்த்து தமிழ்நாடே போராடிய போது அதன் மீது யோகதர்ஷினிக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து யோகதர்ஷினி அவரது தந்தை மற்றும் அண்ணனுடன் சேர்ந்து ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தான் வளர்த்த காளையைக் களமிறக்கினார் யோகதர்ஷினி. அப்போது அவரது காளை பிடிமாடாக போனது.

ஆறுதல் பரிசு
அவரது ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக விழாக் குழுவினர் சிறப்புப் பரிசு வழங்க அழைத்தனர். ஆனால், அதனை வாங்க மறுத்து யோகதர்ஷினி அங்கிருந்து வெளியேறினார். குறிப்பாக விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியே மைக்கில் யோகதர்ஷினியை பரிசு வாங்கிச் செல்லும்படி கூறினார். ஆனாலும், பரிசினை வாங்காமல் சென்று விட்டார் யோகதர்ஷினி. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

கோவையில் கலக்கிய முத்து கருப்பு
இந்த நிலையில் முத்து கருப்பு என்ற தனது காளையைக் கோவை ஜல்லிக்கட்டில் பங்கேற்க அழைத்து வந்தார் யோகதர்ஷினி. 529வது மாடாக யோகதர்ஷினியின் காளை முத்து கருப்பு களம் இறங்கியது. அப்போது யார் கைகளிலும் சிக்காமல் துள்ளிக் குதித்து ஓடியது. இதனால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, யோகதர்ஷினிக்கு சில்வர் அண்டா மற்றும் ஹாட் பாக்ஸ் பரிசாக அளிக்கப்பட்டது. இதையடுத்து யோகதர்ஷினி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தங்கக் காசு பரிசாகப் பெற்றுச் சென்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications