Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வில்லன்களை ஹீரோவாக காண்பிக்கும் திமுக அரசு - தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

கோவை: திமுக அரசு வில்லன்களை ஹீரோவாக காண்பித்து வருகிறது. வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்கின்றது. இஸ்லாமியர் வாக்குகள் வேண்டி இதை செய்கிறார்கள் என்றால் வெட்கக்கேடானது என்று பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் பா.ஜ.க சார்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tejaswi surya DMK

இந்த கூட்டத்தில் தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பேசுகையில், நம்மை அடிப்பவர்களை நாம் மறந்து விடுகிறோம். நாட்டிற்கு உள்ள ஆபத்தை நாம் உணர்வது இல்லை. கோவை மக்களை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். வெடிகுண்டு சம்பவத்துக்கு ஆண்டு தோறும் நினைவு அஞ்சலி மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது. திமுக அரசு வில்லன்களை ஹீரோவாக காண்பித்து வருகிறது.

திமுக அரசு வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்கின்றது. இஸ்லாமியர் வாக்குகள் வேண்டி இதை செய்கிறார் என்றால் வெட்கக்கேடானது. வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழந்த அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள். அல் உம்மா பாட்ஷா வெடிகுண்டு சம்பவத்திற்கு மூளையாக இருந்தவர்.

பயங்கரவாதி பாட்ஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு 5 கிலோ மீட்டர் அனுமதி கொடுத்துள்ளனர். காவலர் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, காவலர்கள் வைத்து சல்யூட் அடிக்க வைத்து உள்ளனர். தமிழக காவல் துறைக்கு திமுக அரசு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசின் வாக்கு வங்கி அரசியல் காரணமாக தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது.

ஆனால், 2014 மோடியின் ஆட்சிக்குப் பிறகு வெடிகுண்டு சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை. திமுக மாடல் தீவிரவாதிகளை விடுதலை செய்வது தான். பாஜகவிற்கு உறுதுணையாக இருப்பது, தீவிரவாததிற்கு எதிராக இருப்பதாக அர்த்தம். 2026 ஆண்டு பாஜக ஆட்சி அமைக்கும் என்றால் தீவிரவாத சம்பந்தப்பட்ட அனைத்து இயக்கங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதை இங்கு உறுதி அளிக்கிறேன்.

பெங்களூரில் இருந்து அடுத்த ஆண்டு ஆயிரம் காலணிகள் அண்ணாமலைக்கு கொடுக்கப்படும், அப்போது திமுக அரசு ஆட்சியில் இருக்காது என்றார்.

பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்று பேசுகையில், 27 ஆண்டுகளாக எதற்கு திரும்ப திரும்ப மக்களுக்கு இதை கூற வேண்டியது ஏன் என கேட்கின்றனர். நமது சமூகத்தை பிளக்க நினைக்கும் வரலாறை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்த கொடுஞ்செயல் மக்களுக்கு இன்னமும் ஆழமாக இருக்கின்றது. கோவையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது இந்த குண்டுவெடிப்புச் சம்பவம். உயிரிழந்தவர்கள் அனைவரும் பா.ஜ.க.வினர், இந்துத்துவா அமைப்பினர் அல்ல. மத பயங்கரவாதத்திற்கு அதிக இழப்புகளை அடைந்த கட்சி பா.ஜ.க.

இந்து கலாச்சாரத்திற்கு தர்மத்திற்கு பாதிப்பு வந்தால் அதை காக்க நாங்கள் இருக்கின்றோம். இதை ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துக் செல்லாமல் இருக்க மாட்டோம். பொங்கல் வைக்காத இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை வைத்து ஏமாற்றும் முதல்வர் இங்கு இருக்கின்றார். தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விழாக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர் முதல்வர் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+