தீவிரவாத அச்சுறுத்தல்.. கோவையில் இரண்டாவது நாளாக பலத்த பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பு!
கோவை: தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து கோவையில் இரண்டாவது நாளாக இன்றும் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக நேற்று முன் தினம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதிக்கு அவசர கடிதம் ஒன்றை உளவுத்துறை இ-மெயில் மூலம் அனுப்பியது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் வணிக வளாகங்கள், கோவில்கள் உட்பட மக்கள் கூடும் இடங்களில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல் கிடைத்தால் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கோவையில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அம்மாவட்ட காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.
போலீசார் மற்றும் ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாகவும் சுமித்சரண் கூறியுள்ளார். சூலூர் விமானப்படை தளம், வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. கோவையில் போலீசாரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதால் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications