தீவிரவாத அச்சுறுத்தல்.. கோவையில் இரண்டாவது நாளாக பலத்த பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பு!
கோவை: தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து கோவையில் இரண்டாவது நாளாக இன்றும் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக நேற்று முன் தினம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதிக்கு அவசர கடிதம் ஒன்றை உளவுத்துறை இ-மெயில் மூலம் அனுப்பியது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் வணிக வளாகங்கள், கோவில்கள் உட்பட மக்கள் கூடும் இடங்களில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல் கிடைத்தால் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கோவையில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அம்மாவட்ட காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.
போலீசார் மற்றும் ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாகவும் சுமித்சரண் கூறியுள்ளார். சூலூர் விமானப்படை தளம், வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. கோவையில் போலீசாரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதால் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications