பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் அரசியல் தொடர்பு இல்லை.. கைதானவர்கள் மீது குண்டர் சட்டம்.. எஸ்பி பேட்டி
Recommended Video

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் அரசியல் தொடர்பு இல்லை என்று கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் அளித்த ஒரு புகார் தமிழகத்தையே குலுக்கியது. சில இளைஞர்கள் பாலியல் வன்முறை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வருகிறார்கள் என்று புகார் அளித்து இருந்தார்.

இதையடுத்து பொள்ளாச்சி போலீஸ் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரித்தது.
இந்த தனிப்படை விசாரணையில் சபரி, வசந்த குமார், சதீஷ் குமார், திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட, வழக்கு குறித்து கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன், விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அரசியல் கட்சியினர் தொடர்பு எதுவும் கிடையாது. முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகள் அவனிடமிருந்து தேவையான தகவல்கள் கிடைத்துள்ளன. தேவைப்பட்டால் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றவாளிகளிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களில், 4 வீடியோக்கள் மட்டுமே இருந்தன. வீடியோவில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு வாக்குமூலம் பெற, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு கோவை எஸ்.பி. பாண்டியராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications