4 நாள் காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசு.. பல விஷயங்களை கறந்த சிபிசிஐடி போலீஸ்!
4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை முடிந்து திருநாவுக்கரசு சிறையில் அடைக்கப்பட்டார்.
Recommended Video

கோவை: கடந்த 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து திருநாவுக்கரசுவிடம் விசாரணை நடத்தியதில் ஏகப்பட்ட விஷயங்களை சிபிசிஐடி போலீசார் கறந்துள்ளார்களாம்!
பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ வசம் செல்கிறது. இருந்தாலும் வழக்கு விசாரணை மாற்றப்படும் முன், சிபிசிஐடி போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையில் இந்த விசாரணை ஆரம்பமானது.
அதன்படி கடந்த தினங்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீடு, பண்ணை வீடு என மாறி மாறி ஆய்வு நடத்தப்பட்டது.

பண்ணை வீடு
நேற்றுகூட "தேர்வு முடிவுகள்" என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு வாகனத்தில் ரகசியமாக சிபிசிஐடி போலீசார்கள் பண்ணை வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார்கள்.

லேப்டாப்
வீடு முழுவதும் ஆய்வு செய்ததுடன், நிபுணர் குழுவை வைத்து அந்த வீட்டின் வரைபடங்களையும் வரைந்த எடுத்து சென்றார்களாம். வீட்டிலிருந்தும் லேப்டாப், பென்டிரைவ் போன்றவற்றைகளை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.

திடுக் தகவல்கள்
மேலும் திருநாவுக்கரசிடம் 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்ததையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் விசாரணை தொடங்கியது. இந்த 4 நாட்களில் பல முக்கிய விஷயங்களையும், திடுக் தகவல்களையும் திருநாவுக்கரசு போலீசாரிடம் வாக்குமூலமாக சொல்லியதாக கூறப்படுகிறது.

சிறையில் அடைத்தனர்
இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி நாகராஜ் வீட்டில் போலீசார் திருநாவுக்கரசை ஆஜர்படுத்தி, பிறகு கோவை சிறையில் அடைத்தனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications