ட்விஸ்ட்.. பாழடைந்த பங்களாவில் நுழைந்த 3 பேர்.. அடுத்தடுத்து பயங்கரம்.. வழக்கில் திடீர் திருப்பம்
சயனைடு கலந்து 3 பேர் கோவையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்
கோவை: கோவையில் தீபாவளியன்று விடிய விடிய மதுகுடித்த 3 பேர் உயிரிழந்ததற்கு, சயனைடு கலந்த மது குடித்ததே காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைதாகி உள்ளார்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன்(31) , சக்திவேல் (60), முருகானந்தம் (55) ஆகியோர்.
இதில் பார்த்திபன், சக்திவேல் 2 பேரும் நண்பர்கள்.. 2 பேருமே பெயிண்ட்டர்கள்.. முருகானந்தம் சமையல் பணி செய்பவர்... அந்த வகையில் கோவைக்கு செல்லும்போது, இவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது..

தீபாவளி
அப்போது முதலே 3 பேருமாக சேர்ந்தே மது அருந்தி வந்துள்ளனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை அன்றும் மது அருந்த முடிவு செய்தனர்.. விடிந்தால் தீபாவளி என்பதால், மது வாங்கி கொண்டு பட்டத்தரசிய்யம்மன் கோவில் அருகே உள்ள ஒரு , பாழடைந்த கட்டிடத்திற்கு சென்று விட்டனர்.. அங்கு உட்கார்ந்து தண்ணி அடித்தால் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்பதால், அதற்குள் 3 பேருமே நுழைந்தனர். விடிய விடிய தண்ணி அடித்தனர்.. பொழுது விடிந்ததும், 3 பேருமே வீட்டுக்கு கிளம்ப அந்த கட்டிடத்தை விட்டு வெளியே வந்தனர்.

பரிசோதனை
இதில், சக்திவேல் மட்டும் போதை அதிகமாகிவிட்டு அவரால் நடக்க கூட முடியவில்லை.. அதனால் கட்டிடத்துக்கு பின்பக்கம் அப்படியே உட்கார்ந்தவர், சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்.. இதேபோல, பாரதியார் சாலையில் சென்று கொண்டிருந்த முருகானந்தமும், நடுரோட்டிலேயே விழுந்து இறந்துவிட்டார். இந்த தகவல் போலீசுக்கு பறந்த நிலையில், அவர்கள் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கள்ளச்சாராயம்
அப்போதுதான், பார்த்திபனும் அவர் வீட்டருகே சடலமாக கிடப்பதை பார்த்து, அவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. 3 பேருமே மது அருந்திதான், இறந்தனரா? அந்த மதுவை எந்த கடையில் வாங்கினர்? ஒருவேளை அது கள்ளச்சாராயமா? அல்லது குடும்ப பிரச்சனையால் 3 பேருமே தற்கொலை செய்து கொண்டார்களா என்ற பலவித கோணங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை கையில் எடுத்தனர். இவர்களின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், முழு உண்மையும் தெரியவரும் என்றும் நம்பப்பட்டது.

திடீர் திருப்பம்
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது... விடிய விடிய மதுகுடித்த 3 பேர் உயிரிழந்ததற்கு சயனைடு கலந்த மது குடித்ததே காரணம் என தெரியவந்துள்ளது... முன்பகை காரணமாக மதுவில் சயனைடு கலந்து கொடுத்து 3 பேருமே கொல்லப்பட்டுள்ளனர்.. இது தொடர்பாக ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இவர் யார்? இவர்களுக்குள் என்ன முன்பகை என்று தெரியவில்லை.. போலீசார் ராஜசேகரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications