செந்தில் பாலாஜிக்கு சிறந்த சிகிச்சை தரமுடியாத தமிழக அரசு? எய்ம்ஸ்க்கு அனுப்பலாம் என வானதி சீண்டல்
கோவை: ‛‛செந்தில் பாலாஜியை பார்த்தால் வருத்தமாக தான் இருக்கிறது. ஒரு அமைச்சருக்கு கூட சிறையில் உணவும், மருத்துவ வசதிகளும் சரியாக இல்லாததால்தான், அவருக்கு திரும்பத்திரும்ப உடல்நிலை சரி இல்லாமல் போகிறது. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்'' என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சீண்டினார்.
தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துரை அவரை கைது செய்தது. முன்னதாக அவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து சென்றது.
அப்போது அவர் நெஞ்சுவலிப்பதாக கூறி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். உடல்நலத்தை காரணம் காட்டி அவர் ஜாமீன் கோரியும் கூட உச்சநீதிமன்றம் வழங்கவில்லை. இதனால் அவர் கடந்த 5 மாதமாக தொடர்ந்து சிறையிலேயே இருக்கிறார்.
இந்நிலையில் தான் கடந்த 15ம் தேதி செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்த பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவருக்கு ரத்த பரிசோதனை, எக்கோ பரிசோதனை, வயிற்று வலிக்கான சோதனை, கழுத்து வலி, முதுகெலும்பு, எம்ஆர்ஐ, எம்ஆர்ஏ, எம்ஆர்சிபி, மூளை நரம்பியல் சார்ந்த இஇஜி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்.
இந்நிலையில் தான் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பப்ட்டது. அதாவது இன்று கோவை கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் மண்டல் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் 107வது மனதின் குரல் நிகழ்ச்சியை வானதி சீனிவாசன் எம்எல்ஏ கேட்டார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது இந்த கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு வானதி சீனிவாசன், ‛‛அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை அடிக்கடி மோசமாகி கொண்டிருக்கிறது என்பது ஒரு மனிதாபிமானத்தின் அடிப்படையில் எங்களுக்குமே வருத்தமாகத்தான் உள்ளது. ஒருவேளை சிறைத்துறை சரியாக அவரை கவனிக்கவில்லையா? தமிழக அரசின் கண்காணிப்பின் கீழ்தான் அவர் இருக்கிறார்.
ஒரு அமைச்சருக்குக்கூட சிறையில் உணவும், மருத்துவ வசதிகளும் சரியாக இல்லாததால்தான், அவருக்கு திரும்பத்திரும்ப உடல்நிலை சரி இல்லாமல் போகிறது என்பது எங்களுக்கு வரக்கூடிய செய்திகளில் இருந்து தெரியவந்திருக்கிறது. ஒருவேளை தமிழக அரசு அவருக்கு சிறந்த மருத்துவத்தையோ, அவருடைய உடல்நிலையையோ கவனிக்க முடியாவிட்டால் மத்திய அரசின் உதவியைக்கூட நாடலாம். எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்குக்கூட அவரை அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கலாம். எனவே, மாநில அரசு அது குறித்தும் யோசிக்க வேண்டும்'' என சீண்டினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications