ஈழத் தமிழர் விவகாரம்: பிரதமர் மோடிக்கு எதிராக நாளை கோவையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்
கோவை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் ஈழத் தமிழருக்கு எதிராக நிலைப்பாடு எடுத்ததால் பிரதமர் மோடிக்கு நாளை கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 6 நாடுகள், இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தருகிறார்.
அப்போது, ஈழத் தமிழருக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் தி.க. அறிவித்துள்ளது. கோவை பீளமேடு பகுதியில் இந்த போராட்டம் நடத்தப்படும் என கோவை ராமகிருட்டிணன் அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications