Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு வேலை கனவு.. ஒரே நேரத்தில் இரட்டை சகோதரிகளுக்கு நடந்த இன்ப அதிர்ச்சி.. மாநிலமே கொண்டாடுது

Subscribe to Oneindia Tamil

கோவை: அரசு வேலையில் சேர வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவர் அரசு வேலையில் சேருவது எளிதில் சாத்தியமில்லை. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். இருவர் அரசு வேலையில் சேர வேண்டும் என்றால் அது மிக அபூர்வமாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஐபிஎஸ், ஐஏஎஸ் என பொறுப்புகளில் ஒரே குடும்பத்தினர் உள்ளார்கள். கேரளாவில் சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது. இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் அரசு வேலை பெற்று அசத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கனோர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி அரசு ஊழியராக போராடுகிறார்கள். ஒரு முறை அரசு ஊழியராக மாறிவிட்டால் அந்த குடும்பத்தின் சமூக அந்தஸ்து உயர்ந்துவிடும். அவர்களின் அடுத்தடுத்த தலைமுறை பெரிய செல்வந்தர் ஆக வாய்ப்பு உள்ளது. நல்ல கல்வி, நல்ல சம்பளம், நல்ல வாழ்க்கை தரம், சமூகத்தில் பெரிய மதிப்பு உயர்ந்துவிடும்.

Twin sisters get government jobs at the same time in Kerala Public Appreciation

தூய்மை பணியாளர் கலெக்டர் ஆகிறார் என்றால், தூய்மை பணியாளர் என்ற அடைமொழி மாறி, கலெக்டரின் மகள்களுக்கு கலெக்டரின் மகள் என்ற அடையாளம் வந்துவிடும். அரசு வேலை என்பது வெறும் பணம் சம்பாதிப்பது என்பதை தாண்டி அடையாளத்தை மற்றும் அந்தஸ்ததை மாற்றும் விஷயமாக இருக்கிறது. இதனால் அரசு வேலைக்கு எப்போதும் மவுசு உண்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. கேரளாவிலும் இதுதான் நிலை. கேரளாவில் சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது. இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் அரசு வேலை கிடைத்துள்ளது.

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரா அடுத்த சுங்கத்தாரா அருகே மணாலி பகுதியில் வசிப்பவர் பாபு. இவரது மனைவி சிந்து. இவர்களுக்கு ட்வின்ஸ் உள்ளனர். இவர்களது மகள்கள் அஞ்சனா (வயது 30), அர்ச்சனா (30) ஆகிய இரட்டை சகோதரிகள் ஆவர். இதில் அஞ்சனா அறிவியல் பாடம் எடுத்து எம்.எஸ்சி., எம்.எல்.டி. படித்துள்ளார். அர்ச்சனா, என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார்

ஈரோடு மாணவனின் காலணியில் பதுங்கிய நாகபாம்பு .. தொட்ட உடன் நடந்த பெரிய ட்விஸ்ட்
ஈரோடு மாணவனின் காலணியில் பதுங்கிய நாகபாம்பு .. தொட்ட உடன் நடந்த பெரிய ட்விஸ்ட்

தொடர்ந்து 2 பேரும் கேரளாவில் அரசு வேலையில் சேரும் கனவுடன் கேரளம் பொதுசேவை ஆணைய தேர்வுக்கு (பி.எஸ்.சி.) கஷ்டப்பட்டு படித்து தயாராகி வந்தார்கள். அதன்படி சமீபத்தில் நடந்த தேர்வை எழுதினர். இதைத்தொடர்ந்து வெளியான தேர்வு முடிவில் அவர்கள் தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தனர்.

இந்தநிலையில் அவர்கள் அரசு வேலையில் நியமிக்கப்பட்டு பணி ஆணையைப் பெற்றுள்ளார்கள். அதன்படி அஞ்சனா கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனராக நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சனா, திரூரில் உள்ள சப்ளை-கோ கிடங்கில் உதவி விற்பனையாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால் இரட்டை சகோதரிகள் மற்றும் அவரது பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மனமகிழ்மன்றத்தில் மாதம் 10 ஆயிரம்.. சப் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி.. பெரிய ட்விஸ்ட்
திண்டுக்கல் மனமகிழ்மன்றத்தில் மாதம் 10 ஆயிரம்.. சப் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி.. பெரிய ட்விஸ்ட்

பிறப்பு, வளர்தல், பள்ளிப்பருவம், கல்லூரி படிப்பு என வாழ்க்கையில் சேர்ந்து பயணித்த இரட்டை சகோதரிகள் அரசு தேர்வுக்கும் ஒன்றாக தயாராகி எழுதி தேர்ச்சியடைந்து தற்போது வேலையையும் பெற்றது கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நீங்கள் தமிழ்நாட்டில் இப்படி ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் அரசு வேலையில் ஒரே நாளில் பணியில் சேர்ந்தது தெரிந்து இருந்தால் கமெண்டில் கூறுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+