பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி எழுதாதீங்க.. குற்றவாளிகளை எழுதுங்க.. வானதி சீனிவாசன் கோரிக்கை
பெண் போலீஸ் அதிகாரி பொள்ளாச்சி வழக்கை விசாரிக்க வேண்டும் என வானதி கோரியுள்ளார்.
Recommended Video

கோவை: பெண் காவல்துறை அதிகாரிகளை வைத்து பொள்ளாச்சி வழக்கை நடத்த வேண்டும் என்று பாஜக சார்பாக வானதி ஸ்ரீநிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் குற்றவாளிகளை பற்றி எழுதுங்கள்.. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி எழுதாதீர்கள் என்று ஊடகங்களுக்கும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
பரபரப்பாகி வரும் பொள்ளாச்சி சம்பவத்தில் சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து பேசக்கூடிய கட்சி பாஜகவும்தான். அதனால் சரமாரியான வசைபாடுகளுக்கு அக்கட்சி உள்ளாகி உள்ளது.
எனினும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க கோரி, கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் சில கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளார் பாஜக மகளிர் அணி சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்.
Also Read | பொள்ளாச்சி பயங்கரம்.. சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கும் மக்கள்

புகைப்படங்கள்
இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி ஸ்ரீனிவாசன் சொன்னதாவது: "சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எந்தவிதமான பின்னணியில் இருக்கக்கூடியவர்களாக இருந்தாலும் அவர்கள் மீதான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். வழக்கமாக பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களின் பெயரையோ, புகைப்படத்தையோ எந்தவிதமான ஊடக செய்திகளில் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.

பெண் அதிகாரி
பெண் காவல்துறை அதிகாரிகளை வைத்து இந்த விசாரணையை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் இ-மெயில் வாட்ஸ்அப், போன்றவற்றில் பகிர்கின்ற வகையிலேயே அந்த செய்திகளை ரகசியமாக வைத்து விசாரணை நடத்தக்கூடிய அளவில் சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மகிளா நீதிமன்றங்கள்
இதுபோன்ற விசாரணைகளின்போது, மகிளா நீதிமன்றங்கள் இருந்தாலும்கூட பாதிக்கப்பட்ட பெண்கள் தயக்கம் இல்லாமல், எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம்தான் கோரிக்கையாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாஜக மகளிர் அணி சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

ரகசியம் காப்பாற்றுங்கள்
ஊடகங்களான உங்களிடம் கூட எங்களுக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது. செய்திகளுக்கு பரபரப்பு முக்கியம்தான். அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையில் இருந்து இதை அணுக வேண்டும். அந்த பெண்களின் வருங்கால வாழ்க்கையையும் மனதில் வையுங்கள். குற்றவாளிகளை பற்றி எழுதுங்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி எழுதாதீர்கள். அந்த ரகசியம் காப்பாற்றுகள்" என்றார்.
இத்தனை பேசிய வானதி சீனிவாசன், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட எஸ்பி வெளியிட்டதாக கூறப்படுவது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications