சி.பி.ராதாகிருஷ்ணனால் தமிழகத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லை.. கணபதி ராஜ்குமார் ஓபன்
கோவை: துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்தவரான சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் பி.சுதர்சன ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேர்தலுக்கான மக்களை மாநிலங்களை உறுப்பினர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் என்றும், அவரால் தமிழகத்திற்கு எந்த பிரயோஜனமும் கிடையாது என்றும் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 14 ஆவது துணை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

இந்தியா கூட்டணி சார்பில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தெலங்கானாவை சேர்ந்தவருமான பி.சுதர்சன ரெட்டியும் போட்டியிடுகிறார். துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான மாதிரி வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது.
துணை குடியரசுத் தலைவர்களுக்கான தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதியானவர்கள். இந்தியா கூட்டணி சார்பில் மாதிரி வாக்கெடுப்பு இன்று மதியம் 2.30 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்காக கோவை நாடளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, கோவை நாடளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இன்று அனைவரும் டெல்லி செல்கிறோம். எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து இன்று பயிற்சி அளிக்க உள்ளனர். நாளை அனைவரும் வாக்களிக்க உள்ளோம்.
இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு தான் வாக்களிக்க உள்ளோம். பாஜக வேட்பாளர் தமிழர் என்பதால் எப்படி வாக்களிக்க முடியும். தற்போதைய ஒன்றிய அரசு தமிழர்களுக்காக என்ன செய்தது. இது போன்ற அலங்கார பதவி கொடுப்பது ஊரை ஏமாற்றும் செயல்.
சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். ஆனால் அவரால் தமிழகத்திற்கு எந்த பிரயோஜனமும் கிடையாது. பாஜகவிற்கு மெஜாரிட்டி உள்ளது, ஆனால் அவர்களது ஓட்டும் எங்களுக்கு வரலாம் என்று எதிர்பார்ப்பு உள்ளது. கொள்கை அடிப்படையில் எங்கள் தலைவர் எடுக்கும் முடிவையே நாங்கள் கேட்கிறோம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications