Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.. அமைதியாக பந்த் மட்டுமே செய்கிறோம்.. தமிழிசை செளந்தரராஜன் கருத்து

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், எதிர்ப்பை தெரிவிக்கவும் நடத்தப்படுவதே பந்த் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது உறவினர் இல்லத் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கோவை வந்தார். அவர் வரும் வழியில் வழக்கத்தை விட தீவிரமாக பாதுகாப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தமிழிசை செல்லும் வழியான கோவை - அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் சாலையோரம் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரை எடுக்க நீண்ட நேரமாக யாரும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தினர்.

தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

கோவை விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தாரஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எல்லா இடமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கோவை என்றாலே பரபரப்பு என்று இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். தீவிரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்.

கவனம் தேவை

கவனம் தேவை

கோவையில் பரபரப்பான நிகழ்வுகள் இல்லாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையினை மத்திய அரசு ஏற்று என்ஐஏ விசாரணைக்கு உத்தவிட்டுள்ளது. பாதுகாப்பிற்கு ஒரு உத்திரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு செயல்பட வேண்டும். கோவை சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பி இருக்கின்றது. ஏன், இப்படி நடந்தது என்பதை காவல்துறை பார்க்க வேண்டும். என்ஐஏ மட்டுமல்ல, தமிழ்நாடு காவல் துறையும், கோவை சம்பவத்தில் கவனமுடன் இருந்து இருக்க வேண்டும்.

பாஜகவின் கருத்து

பாஜகவின் கருத்து

கோவையில் நடந்த சம்பவம் முதலில் கார் கேஸ் சிலிண்டர் என்று மேலோட்டமாக கூறப்பட்டது. பின்னர் அது வேறு விதமாக மாறியது. ஒருத்தர் மேல கவனத்தை செலுத்தாமல் முற்றிலும் பாதுகாப்பை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். குண்டு வெடித்ததை பாஜக சொல்லித்தான் பீதி அடையனுமா? மக்கள் எல்லோரும் தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருக்கின்றனர். அத்தகைய கருத்துகள் வரும் போது எச்சரிக்கையாக இருக்க வாய்ப்புள்ளது.

போராட்ட வழிமுறை

போராட்ட வழிமுறை

பந்த் நடத்துவது என்பது அனைத்து இயக்கங்களும் ஏற்றுக்கொள்ளும் போராட்ட வழிமுறை. இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக எதிர்ப்பை தெரிவிக்க நடத்துவது தான் பந்த். கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. கோவை அமைதியான நிலையில் கடையை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கும் முறை தான் பந்த். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் விருப்பம் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+